News November 24, 2024

சைபர் குற்றங்களில் இருந்து தப்பிக்க இதை செய்யுங்க

image

உங்கள் வங்கி கணக்கின் நடவடிக்கைகளை அடிக்கடி கண்காணிக்கவும். ஏதாவது, அனுமதியற்ற பரிமாற்றங்கள் குறித்து கண்டுபிடித்தால் உடனடியாக வங்கிக்கு தெரிவிக்கவும். தெரியாத இணைப்புகளை கிளிக் செய்வது, செய்திகள் அல்லது மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதை தவிர்க்கவும். முக்கிய UPI தரவு மற்றும் OTP-களை பகிர கூடாது. நிதி பரிமாற்றங்களுக்கு எப்போதும் அதிகாரப்பூர்வ செயலிகள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்தவும்.

Similar News

News September 17, 2025

கள்ளக்குறிச்சி: 10ஆம் வகுப்பு போதும்! ரூ.69,100 வரை சம்பளம்

image

மத்திய புலனாய்வு துறையில் காலியாக உள்ள பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு 455 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு,
▶️ கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
▶️ சம்பளம்: ரூ.21,700-ரூ.69,100
▶️ வயது வரம்பு: 18-27 வரை (கணவரை இழந்த பெண்கள், விவகாரத்து பெற்றவர்கள், சட்டப்படி பிரிந்து வாழ்பவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு)
▶️ கடைசி தேதி: செப்டம்பர் 28
இந்த<> லிங்க்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News September 17, 2025

கள்ளக்குறிச்சி: இலவசமா காசிக்கு போக செம்ம வாய்ப்பு!

image

தமிழக இந்து சமய அறநிலையத்துறை 600 பக்தர்களை ராமேஸ்வரம் – காசிக்கு ரயில் மூலமாக இலவசமாக ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்ல உள்ளது. 60 முதல் 70 வயதுடைய, ஆண்டுக்கு ரூ. 2 லட்சத்திற்குள் வருமானம் உள்ள பக்தர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவங்களை கள்ளக்குறிச்சி மண்டல இணை ஆணையர் அலுவலகத்திலோ அல்லது இந்த <>இணையதளத்திலோ <<>>பெற்று அக்டோபர் 22-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News September 17, 2025

கள்ளக்குறிச்சி: தொடரும் வரதட்சணை அவலங்கள்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியை சேர்ந்த அசோக்நாத் மற்றும் அவரது மனைவி பிரியங்காதாஸ் இருவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் ஆனது. குழந்தை இல்லாததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. இதற்கிடையில் அசோக்நாத் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு பிரியங்காதாஸை கொடுமைப்படுத்தினர். புகாரின் அடிப்படையில் அசோக்நாத் உட்பட 7 பேர் மீது நேற்று காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர்.

error: Content is protected !!