News November 24, 2024

சைபர் குற்றங்களில் இருந்து தப்பிக்க இதை செய்யுங்க

image

உங்கள் வங்கி கணக்கின் நடவடிக்கைகளை அடிக்கடி கண்காணிக்கவும். ஏதாவது, அனுமதியற்ற பரிமாற்றங்கள் குறித்து கண்டுபிடித்தால் உடனடியாக வங்கிக்கு தெரிவிக்கவும். தெரியாத இணைப்புகளை கிளிக் செய்வது, செய்திகள் அல்லது மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதை தவிர்க்கவும். முக்கிய UPI தரவு மற்றும் OTP-களை பகிர கூடாது. நிதி பரிமாற்றங்களுக்கு எப்போதும் அதிகாரப்பூர்வ செயலிகள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்தவும்.

Similar News

News November 16, 2025

கள்ளக்குறிச்சி: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>இங்கு கிளிக்<<>> செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 16, 2025

கள்ளக்குறிச்சியில் 333 பேர் ஆப்சென்ட்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (நவ.16), தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1, 7 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வினை எழுத மொத்தம் 2,389 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், தேர்வு எழுத 2,056 பேர் மட்டுமே ஆர்வமுடன் வந்திருந்தனர். மீதம், 333 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 16, 2025

கள்ளக்குறிச்சி: சூதாட்டம் ஆடிய 4 பேர் கைது!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே, வடதொரசலூரில் உள்ள தனியார் பள்ளியின் அருகே சிலர் பணத்தை வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார், சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழுமலை, சரவணன், மணிவேல் மற்றும் ஜீவா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ.1000 மற்றும் 5 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!