News November 24, 2024
சைபர் குற்றங்களில் இருந்து தப்பிக்க இதை செய்யுங்க

உங்கள் வங்கி கணக்கின் நடவடிக்கைகளை அடிக்கடி கண்காணிக்கவும். ஏதாவது, அனுமதியற்ற பரிமாற்றங்கள் குறித்து கண்டுபிடித்தால் உடனடியாக வங்கிக்கு தெரிவிக்கவும். தெரியாத இணைப்புகளை கிளிக் செய்வது, செய்திகள் அல்லது மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதை தவிர்க்கவும். முக்கிய UPI தரவு மற்றும் OTP-களை பகிர கூடாது. நிதி பரிமாற்றங்களுக்கு எப்போதும் அதிகாரப்பூர்வ செயலிகள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்தவும்.
Similar News
News November 17, 2025
கள்ளக்குறிச்சியில் மின்தடை! உங்க ஏரியா இருக்கா?

கள்ளக்குறிச்சி: வாணாபுரம் அடுத்த அரியலூர் துணை மின் நிலையத்தில் நாளை (நவ.18) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதன் காரணமாக அரியலூர், அத்தியூர், மையனூர், சீர்ப்பனந்தல், எடுத்தனூர், ஜம்படை, வாணாபுரம், பகண்டை கூட்டு ரோடு, ஏந்தல், பொற்பாலம்பட்டு, மணியந்தல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி – மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்படும் என சங்கராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.
News November 17, 2025
வடக்கநந்தல் பகுதியில் வாக்கு திருத்தம் பணியில் கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடக்கநந்தல் பேரூராட்சி பகுதியில் வாக்காளர் தீவிர திருத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார், அப்போது சின்னசேலம் தாசில்தார் கிராம நிர்வாக அலுவலர்கள் அப்போது கலெக்டர் பணியை கவனமாக மேற்கொள்ள வேண்டும் சரியான வாக்காளர்கள் விடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
News November 16, 2025
கள்ளக்குறிச்சி: பேருந்து நிலைய பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏமப்பேர் புறவழிச்சாலை ரவுண்டானா அருகே புதிதாக அமைக்கப்பட்டு வரும் கள்ளக்குறிச்சி புதிய புறநகர் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் முன்னிலையில் நகராட்சி நிர்வாக இயக்குனர் மதுசூதனன் ரெட்டி நவம்பர் 16-ஆம் தேதி என்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மழைக்காலம் வரும் முன் இந்த பணிகளை முடிவையும் அறிவுறுத்தினார்.


