News April 15, 2025
சேலம் வழியாக கோடைக்கால சிறப்பு ரயில் அறிவிப்பு!

கோடைக்காலத்தை முன்னிட்டு, வரும் ஏப்.19- ஆம் தேதி பெங்களூருவில் இருந்து கொல்லத்திற்கும், ஏப்.20- ஆம் தேதி கொல்லத்தில் இருந்து பெங்களூருவுக்கும் கோடைக்கால சிறப்பு ரயில்கள் (06585/06586) இயக்கப்படுகின்றன. சிறப்பு ரயில்கள் சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக இயக்கப்படுகின்றன. சேலம் ரயில் நிலையத்தில் சுமார் 10 நிமிடங்கள் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 18, 2025
கார் கவிழ்ந்த விபத்தில் சேலம் தம்பதி உயிரிழப்பு!

சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (58); வெள்ளி வியாபாரி. இவரது மனைவி கவிதா (49). இவர்கள், நேற்று காலை தங்களுக்கு சொந்தமான காரில், சேலம் – அரூர் தேசிய நெடுஞ்சாலையில், அரூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். காலை, 8:30 மணிக்கு கட்டுப்பாட்டை இழந்தகார், இருளப்பட்டி கானியம்மன் கோவில் எதிரே தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் கணவன் -மனைவி இருவரும் உயிரிழந்தனர்.விபத்து குறித்து போலீசார் விசாரணை!
News October 18, 2025
விவசாயிகளுக்கான மானியம் ஆட்சியர் தகவல்

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் வேளாண்மை விளைப் பொருட்களுக்கான மதிப்பு கூட்டுதல் மற்றும் பதப்படுத்துதல் தொழில் மேற்கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார் சேலத்திற்கு ரூபாய் இரண்டு கோடி இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் (http://www.agrimark.in.gov.in/)இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்
News October 18, 2025
சேலம்:வாலிபருடன் பழகிய மனைவி கொலை!

சேலம், தாதகாப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி ரதிதேவி (28). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது ரதிதேவி, தான் வேலை பார்க்கும் இடத்தில் ஒருவருடன் பழகிவந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கண்ணன், வீட்டில் இருந்த கத்தியால் ரதிதேவியை சரமாரியாகக் குத்தினார். இதில் ரதிதேவி உயிரிழந்தார். அன்னதானப்பட்டி போலீசார் கண்ணனைப் கைது செய்து விசாரணை