News August 17, 2024
சேலம் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணை நடப்பு ஆண்டில் 3 வது முறையாக நிரம்பி மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள உபரிநீர் போக்கி வழியாக உபரிநீர் எந்நேரமும் திறக்க வாய்ப்பிருப்பதால், காவேரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆற்றில் இறங்கவும், குளிக்கவும், துணி துவைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக் கூடாது என்று வருவாய்த்துறை சார்பில் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 24, 2025
சேலம் மாவட்ட மக்களுக்கு அறிவிப்பு!

சேலம் மாநகர காவல்துறை, ஆன்லைன் கணக்கு மோசடிகளை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. அறிமுகமற்ற நபர்களிடம் OTP, கடவுச்சொல், வங்கி விவரங்கள் போன்ற தகவல்களை ஒருபோதும் வழங்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. போலியான இணைய இணைப்புகள் மற்றும் உதவி கோரும் அழைப்புகள் மூலம் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவித்துள்ளனர்.
News November 24, 2025
சேலத்தில் அம்மா திட்டியதால் நேர்ந்த சோகம்!

சேலம் பூமி நாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் நவீனா(29). இவர் வயிற்று வலியால் மிகவும் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் ஏற்பட்ட சண்டையில் அவரது தாய் நவீனாவை திட்டியுள்ளார். வயிற்று வலியாலும், அம்மா திட்டியதாலும், மனம் உடைந்த நவீனா வீட்டில் இருந்த அனைத்து மாத்திரைகளையும் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 24, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.


