News April 16, 2025
சேலம் மாவட்டத்தில் “காவல் உதவி” செயலி குறித்து காவல்துறை விழிப்புணர்வு…!

சேலம் மாவட்ட காவல்துறை, பொதுமக்கள் அவசரநிலைகளில் உடனடி பாதுகாப்பு மற்றும் உதவியை பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள “காவல் உதவி” செயலியின் பயன்பாட்டை விளக்கும் நடவடிக்கைகளை இன்று சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. மக்கள் இந்த செயலியை தங்கள் மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இந்த செயலி வழியாக அவசர உதவிக்கு அழைக்கலாம், புகார் அளிக்கலாம், காவல் நிலைய தகவல்கள் தெரிந்துகொள்ளலாம்.
Similar News
News November 22, 2025
தலைவாசல் அருகே டவுசர் கொள்ளையர்கள்!

தலைவாசல் அருகே நத்தகரை கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவர், கேரள மாநிலத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயசூர்யா (25). இவர் வீட்டின் பின் பக்க கதவை பூட்டாமல் தூங்கி உள்ளார். நள்ளிரவில் முகமூடி அணிந்த டவுசர் கொள்ளையர்கள் 2 பேர், வீட்டுக்குள் நுழைந்து அவரை மிரட்டி 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
News November 22, 2025
ரயில் பயணிகள் கவனத்திற்கு

சேலம் முதல் ஈரோடு வரை மெமு பாசஞ்சர் ரயில் சேவை நவம்பர் 24-ந் தேதி முதல் தொடங்குகிறது. சேலம் – ஈரோடு மெமு ரயில் (66621) சேலத்தில் காலை 6.15 மணிக்கு புறப்பட்டு மகுடஞ்சாவடி, சங்ககிரி, காவிரி வழியாக 7.25 மணிக்கு ஈரோடு சென்றடையும். ஈரோட்டில் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு 8.45 மணிக்கு சேலம் வந்தடையும். (ஷேர் பண்ணுங்க)
News November 22, 2025
ரயில் பயணிகள் கவனத்திற்கு

சேலம் முதல் ஈரோடு வரை மெமு பாசஞ்சர் ரயில் சேவை நவம்பர் 24-ந் தேதி முதல் தொடங்குகிறது. சேலம் – ஈரோடு மெமு ரயில் (66621) சேலத்தில் காலை 6.15 மணிக்கு புறப்பட்டு மகுடஞ்சாவடி, சங்ககிரி, காவிரி வழியாக 7.25 மணிக்கு ஈரோடு சென்றடையும். ஈரோட்டில் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு 8.45 மணிக்கு சேலம் வந்தடையும். (ஷேர் பண்ணுங்க)


