News April 16, 2025

சேலம் மாவட்டத்தில் “காவல் உதவி” செயலி குறித்து காவல்துறை விழிப்புணர்வு…!

image

சேலம் மாவட்ட காவல்துறை, பொதுமக்கள் அவசரநிலைகளில் உடனடி பாதுகாப்பு மற்றும் உதவியை பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள “காவல் உதவி” செயலியின் பயன்பாட்டை விளக்கும் நடவடிக்கைகளை இன்று சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. மக்கள் இந்த செயலியை தங்கள் மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இந்த செயலி வழியாக அவசர உதவிக்கு அழைக்கலாம், புகார் அளிக்கலாம், காவல் நிலைய தகவல்கள் தெரிந்துகொள்ளலாம்.

Similar News

News December 6, 2025

சேலம் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு!

image

சேலம் மாவட்ட காவல்துறை வாகன ஓட்டிகளுக்காக பாதுகாப்பு விழிப்புணர்வு புகைப்படம் வெளியிட்டுள்ளது. ஓட்டுநர்கள் பயணிக்கும் போது மொபைல் போனை பயன்படுத்துவது விபத்துக்கான முக்கிய காரணமாக இருப்பதால், “You Can’t Do Both – Don’t Text While Drive” என எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டது. மேலும் பொதுமக்களை, உயிர் பாதுகாப்பை முன்னிறுத்தி, பயணத்தின் போது மொபைல் பயன்படுத்தாமல் கவனமாக ஓட்டுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

News December 6, 2025

சேலம்: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

image

சேலம் மாநகர காவல் துறை சார்பில், போக்குவரத்து விதிமுறைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை இயக்கும் போது, அதிக வெளிச்சம் கொண்ட கண்களை பூச செய்யும் விளக்குகளை பயன்படுத்த வேண்டாம் என்றும், இந்த விளக்குகளினால்எதிரே வரும் வாகனங்களில் பயணிப்போர் விபத்திற்கு உள்ளாக நேரிடும் என்பதால், வாகன ஓட்டிகள் இதுபோன்ற விளக்குகளை தவிர்க்க வேண்டும் என அறிவித்துள்ளது.

News December 6, 2025

தலைவாசல் அருகே மின்சாரம் தாக்கி நடந்த சம்பவம்!

image

கெங்கவல்லி தாலுகா ஆணியம்பட்டி புதூரைச் சேர்ந்த தொழிலாளி விஸ்வநாதன் (39) நேற்று தலைவாசல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே கட்டுமானப் பணியில் இருந்தபோது, மேலே சென்ற மின்கம்பி அவரது கையில் தொடுவதால் மின்சாரம் தாக்கி கீழே வீழ்ந்து கடுமையாக காயமடைந்தார். ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் வழியிலேயே உயிரிழந்தது தெரியவந்தது. தலைவாசல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!