News April 3, 2025

சேலம் மாநகரில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டத்திற்கு  கட்டுப்பாடு

image

சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் போன்றவற்றை நடத்துவதற்கு மாநகர போலீஸ் கமிஷனரின் அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டும். மேலும் நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் வருகிற ஏப்ரல் 17-ந் தேதி நள்ளிரவு வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என சேலம் போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு தெரிவித்துள்ளார்.

Similar News

News November 22, 2025

தலைவாசல் அருகே டவுசர் கொள்ளையர்கள்!

image

தலைவாசல் அருகே நத்தகரை கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவர், கேரள மாநிலத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயசூர்யா (25). இவர் வீட்டின் பின் பக்க கதவை பூட்டாமல் தூங்கி உள்ளார். நள்ளிரவில் முகமூடி அணிந்த டவுசர் கொள்ளையர்கள் 2 பேர், வீட்டுக்குள் நுழைந்து அவரை மிரட்டி 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

News November 22, 2025

ரயில் பயணிகள் கவனத்திற்கு

image

சேலம் முதல் ஈரோடு வரை மெமு பாசஞ்சர் ரயில் சேவை நவம்பர் 24-ந் தேதி முதல் தொடங்குகிறது. சேலம் – ஈரோடு மெமு ரயில் (66621) சேலத்தில் காலை 6.15 மணிக்கு புறப்பட்டு மகுடஞ்சாவடி, சங்ககிரி, காவிரி வழியாக 7.25 மணிக்கு ஈரோடு சென்றடையும். ஈரோட்டில் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு 8.45 மணிக்கு சேலம் வந்தடையும். (ஷேர் பண்ணுங்க)

News November 22, 2025

ரயில் பயணிகள் கவனத்திற்கு

image

சேலம் முதல் ஈரோடு வரை மெமு பாசஞ்சர் ரயில் சேவை நவம்பர் 24-ந் தேதி முதல் தொடங்குகிறது. சேலம் – ஈரோடு மெமு ரயில் (66621) சேலத்தில் காலை 6.15 மணிக்கு புறப்பட்டு மகுடஞ்சாவடி, சங்ககிரி, காவிரி வழியாக 7.25 மணிக்கு ஈரோடு சென்றடையும். ஈரோட்டில் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு 8.45 மணிக்கு சேலம் வந்தடையும். (ஷேர் பண்ணுங்க)

error: Content is protected !!