News April 3, 2025
சேலம் மாநகரில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டத்திற்கு கட்டுப்பாடு

சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் போன்றவற்றை நடத்துவதற்கு மாநகர போலீஸ் கமிஷனரின் அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டும். மேலும் நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் வருகிற ஏப்ரல் 17-ந் தேதி நள்ளிரவு வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என சேலம் போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு தெரிவித்துள்ளார்.
Similar News
News August 5, 2025
சேலம்: விருதிற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

சேலம் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் பராமரிப்பு நிறுவனத்திற்கான அறிவிப்பு முன்மாதிரியான சேவை விருது பெற விண்ணப்பிப்பதற்கு இன்று(ஆக.5) மாலையுடன் கால அவகாசம் நிறைவு பெறுகிறது. தகுதி வாய்ந்த நிறுவனங்கள் விருதுகள் பெற விரும்பினால் உடனடியாக தங்களுடைய அனைத்து ஆவணங்களையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.
News August 5, 2025
சேலத்தில் இன்றைய முக்கிய நிக்ழ்வுகள்

♦️ காலை 9 மணி அம்மாபேட்டை, ராஜசேகர் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் ♦️நிலவாரப்பட்டி சமுதாயக்கூடத்தில் முகாம் ♦️காலை 10:15 பெரியார் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கம் ♦️காலை 10.30 மணி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன் செய்தியாளர் சந்திப்பு கூட்டம் கட்சி அலுவலகம் ♦️காலை 6 மணி முதல் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் பொங்கல் வைபவம்.
News August 5, 2025
சேலம்: கறவை மாடு வாங்க ரூ.1.20 லட்சம்!

சேலம் மக்களே.., தமிழ்நாடு அரசின் TABCEDCO மூலம் கறவை மாடு வாங்க ரூ.1.20 லட்சம் வரை கடனுதவி சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் மூலம் வழங்கப்படுகிறது. 5 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படும் இந்தக் கடனை3 ஆண்டுகளில் திருப்பி செலுத்தலாம். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் கீழ் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். உடனே மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தை அணுகவும். (SHARE IT)