News April 4, 2025

சேலம் மாணவி மரணம்: அரசுக்கு இபிஎஸ் கேள்வி!

image

“நீட் பயிற்சியில் அதிக மதிப்பெண் எடுக்க முடியாததால் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த சத்யா என்ற மாணவி தன் உயிரை மாய்த்துக் கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது;நீட் தேர்வை வைத்து இன்று வரை அரசியல் செய்யும் திமுக, தங்கள் ஆட்சியில் 20 பேர் நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்துள்ளதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது?” என அதிமுக. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி

Similar News

News December 14, 2025

சேலம்:திருமணம் ஆகாத ஏக்கத்தில் சோகமான முடிவு!

image

சேலம்: இந்திரா நகர் மேச்சேரி பிரிவு ரோட்டைச் சேர்ந்த பழ வியாபாரி லட்சுமண பெருமாள் (30), திருமணம் ஆகாத ஏக்கத்தில் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர், நேற்று தனது பழக்கடை குடோனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் சடலத்தைக் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News December 14, 2025

இன்று சேலம் வருகிறார் CM ஸ்டாலின்!

image

தர்மபுரியில் நடைபெறுகின்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனி விமானம் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் அயோத்தியாபட்டணம் வழியாக பாப்பிரெட்டிப்பட்டி செல்கிறார். இதனை முன்னிட்டு சேலம் மாவட்டத் தில் இன்று (14ம்தேதி) டிரோன்கள் பறக்கத் தடை விதித்து மாவட்ட க கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார்.

News December 14, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

error: Content is protected !!