News September 13, 2024

‘சேலம் மாணவிக்கு ரூ.1 லட்சம் பரிசு’

image

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, “2019இல் உயர்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான ‘பாரதி இளம் கவிஞர்’ போட்டி இந்த ஆண்டு நடைபெற்றது. இதில் ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு, சேலம் கல்லூரி மாணவி நிவேதாவுக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகையுடன் விருது வழங்கப்பட்டது” என்றார்.

Similar News

News January 9, 2026

சேலம்: அரசு சேவைகள் இனி உங்கள் வாட்ஸ்அப்பில்!

image

சேலம் மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள்,மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே பொதுமக்கள் எளிதாகப் பெறலாம். இதற்காகத் தமிழக அரசு 7845252525 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணிற்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 9, 2026

கெங்கவல்லியில் காதல் ஜோடி தஞ்சம்!

image

கெங்கவல்லி அருகே கடம்பூரை சேர்ந்தவர் லோகநாதன் (25) கூலிதொழிலாளி. ஆத்துாரை சேர்ந்த ஜனனி (19) கல்லுாரி படிக்கிறார். இருவர்களது காதலுக்கு இரு வீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம், வீட்டை விட்டு வெளியேறி, இருவரும் திருமணம் செய்து கொண்டு நேற்று கெங்கவல்லி போலீசில் தஞ்சமடைந்தனர். இரு வீட்டு பெற்றோரை அழைத்த போலீசார் பேச்சு நடத்தி லோகநாதனுடன், ஜனனியை அனுப்பினர்.

News January 9, 2026

சேலம்: ரயிலில் அடிபட்டு 377 பேர் பலி! அதிர்ச்சி தகவல்

image

சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் பல்வேறு இடங்களில் ரயிலில் சிக்கி 377 பேர் உயிரிழந்துள்ளனர்.இதில் சேலத்தில் 132 பேரும், ஜோலார்பேட்டையில் 125 பேரும் அதிகபட்சமாக உயிரிழந்துள்ளனர். காட்பாடி: 82, ஓசூர்: 20, தர்மபுரி: 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

error: Content is protected !!