News June 27, 2024

சேலம் மக்கள் கவனத்திற்கு…

image

கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ், சேலம் மாவட்டத்திற்கு 4,229 வீடுகள் கட்ட முதற்கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 30ஆம் தேதி நடைபெறும் சிறப்பு கிராம சபையில் இதற்கான ஒப்புதல் பெறப்பட உள்ளது என்றும், பொதுமக்கள் அனைவரும் அன்று தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News September 18, 2025

நாளை எங்கெங்கு முகாம் தெரியுமா மக்களே?

image

சேலம் சதுரங்காடி, கற்பகம் திருமண மண்டபம், ஓமலூர், செவ்வாய்சந்தை ரோட்டில் உள்ள சமுதாயக்கூடம், மல்லமூப்பம்பட்டியில் சாந்தி ராதாகிருஷ்ணன் திருமண மாளிகை, குமாரபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் நாளை (செப்.19) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 வரை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு நடைபெறுகிறது. இம்முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அழைப்பு!

News September 18, 2025

சேலம்: அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்!

image

சேலம், ஓமலூரில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இதுவரை 153 சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை நேரில் சந்தித்து பிரச்சாரம் செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

News September 18, 2025

திமுகவின் இரட்டை நிலைப்பாடு-இபிஎஸ் விமர்சனம்

image

சேலம் ஓமலூரில் செய்தியாளர் சந்திப்பில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க.வின் இரட்டை நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்தார். எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாட்டையும், ஆளுங்கட்சியாக மாறியதும் அதற்கு நேர்மாறான நிலைப்பாட்டையும் தி.மு.க கொண்டிருப்பதாகக் கூறினார். எதிர்க்கட்சியாக இருந்தபோது விமர்சித்தவர்களுக்கு இப்போது ரத்தினக் கம்பளம் விரிப்பதாகவும் அவர் சாடினார்.

error: Content is protected !!