News March 24, 2025

சேலம்; காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

image

ஈரோடு மாவட்டம் சித்தார்கேசரிமங்கலத்தை சேர்ந்தவர் பொக்லைன் ஆபரேட்டரான யுவராஜன் (வயது 34). இவர் நேற்று தனது நண்பர்களான மேச்சேரி பகுதியை சேர்ந்த 3 பேருடன் கூனாண்டியூர் காவிரி ஆற்றில் குளிக்க சென்றார். யுவராஜன் ஆற்றில் இறங்கி குளித்தபோது திடீரென தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மேச்சேரி போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News July 8, 2025

டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு அரசு வேலை!

image

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,910 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, ஐடிஐ, இன்ஜினியரிங், டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். இதற்கான தேர்வு சேலத்தில் வரும் 31ஆம் தேதி நடைபெறும். மேலும் விவரங்களுக்கு <>இங்கே கிளிக்<<>> செய்யவும். ஷேர் செய்யுங்கள்.

News July 8, 2025

அடுத்தடுத்து 2 வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

image

கருப்பூர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் தனபால், இன்று மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ.5,000 பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. அதேபோல், தனபால் வீட்டிற்கு அருகாமையில் உள்ள ரகுநாத் என்பவர் வீட்டிலும் ரூ.5,000 திருடு போனது. அடுத்தடுத்து 2 வீடுகளில் நடந்த இந்த சம்பவங்கள் குறித்து கருப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News July 8, 2025

சேலத்தில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

image

சேலம் மாவட்டத்தில் பல்வேறு துணை மின் நிலையங்களில் இன்று (ஜூலை 8) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி ▶️ உடையாப்பட்டி துணை மின் நிலையம் ▶️மேட்டுப்பட்டி துணை மின் நிலையம் ▶️மல்லியக்கரை துணை மின் நிலையம் ▶️கருப்பூர் துணை மின் நிலையம் ▶️நங்கவள்ளி, மேச்சேரி, மேட்டூர் ஆர்.எஸ். துணை மின் நிலையங்களில் நாளை மின் விநியோகம் இருக்காது.SHAREit

error: Content is protected !!