News March 24, 2025

சேலம்; காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

image

ஈரோடு மாவட்டம் சித்தார்கேசரிமங்கலத்தை சேர்ந்தவர் பொக்லைன் ஆபரேட்டரான யுவராஜன் (வயது 34). இவர் நேற்று தனது நண்பர்களான மேச்சேரி பகுதியை சேர்ந்த 3 பேருடன் கூனாண்டியூர் காவிரி ஆற்றில் குளிக்க சென்றார். யுவராஜன் ஆற்றில் இறங்கி குளித்தபோது திடீரென தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மேச்சேரி போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News November 28, 2025

திமுக நிர்வாகி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் கைது!

image

சேலம் மாவட்டம் பெத்த நாயக்கன் பாளையம் ஒன்றியம் கல்வராயன் மலை, கிராங்காடு திமுக கிளை செயலாளர் ராஜேந்திரன் கடந்த 22ஆம் தேதி மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் அவரது உறவினர் ராஜமாணிக்கம், ஜெயக்கொடி, பழனிசாமி மற்றும் குழந்தைவேல் ஆகியோரை போலீசார் இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 28, 2025

சேலம்: திமுக நிர்வாகி கொலை சம்பவம்: 4 பேர் கைது

image

சேலம் மாவட்டம் கருமந்துறை பகுதியில் கடந்த வாரம் திமுக கிளைச் செயலாளர் ராஜேந்திரனை துப்பாக்கியால் சுட்ட வழக்கில், அவருடைய உறவினர்கள் நான்கு பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். நிலப் பிரச்சனை காரணமாக முன் விரோதம் இருந்து வந்த நிலையில், கொலை செய்தேன் என்று கூறியதை அடுத்து நான்கு பேர் மீது கருமந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

News November 28, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

image

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரக உட்கோட்டத்திற்கு ஆய்வாளர் நதியா, சங்ககிரி ஆய்வாளர் தனலட்சுமி, ஆய்வாளர் ஹேமலதா, மேட்டூர் ஆய்வாளர் வளர்மதி, ஓமலூர் ஆய்வாளர் சுப்பிரமணியன், வாழப்பாடி ஆய்வாளர் சம்பூரணம், ஆகியோர் காவல் பணியில் ஈடுபடுவார்கள் என்றும், மேலும் உதவிக்கு 0427-2273100 என்ற எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!