News February 16, 2025
சேலம்: இளம்பெண் பாலியல் பலாத்காரம்… கைது!

சேலம், தாரமங்கலம் அருகே ஆரூர்பட்டி கிராமம் மேட்டுமாரனூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (36), கல் உடைக்கும் தொழிலாளி. இவர் 2010ம் ஆண்டு அதே பகுதியில் வசித்து வந்த ஒரு இளம் பெண்ணை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இவரை நேற்று கிருஷ்ணகிரி அருகே தாரமங்கலம் போலீசார் கைது செய்தனர்.
Similar News
News December 1, 2025
சேலம்: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

சேலம் மாவட்டத்தில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். (SHARE பண்ணுங்க!)
News December 1, 2025
சேலம்: ரயிலில் ஏற முயன்ற பெண் தவறி விழுந்து பலி

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சேர்ந்த மாபுபலி மனைவி, சர்பன் பீபி(72), நேற்று காலை கேரளா செல்ல பெங்களூரு–எர்ணாகுளம் இன்டர்சிட்டி ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணிக்க முயன்றபோது, 9-வது பெட்டியில் முன்பதிவு செய்யப்பட்ட உறவினர்களுடன் சேர முயற்சித்தபோது ரெயில் புறப்பட்டு தண்டவாளத்தில் விழுந்து இறந்தார். ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 1, 2025
சேலம் அருகே மயில் மோதியதில் பெண் பலி!

சேலம் அருகே நாவப்பாளையம் பகுதியில் பிரபுதேவா மற்றும் மனைவி கோகிலா நேற்று மோட்டார் சைக்கிளில் வீட்டு திரும்பும்போது கல்பாரப்பட்டி அருகே ஒரு மயில் திடீரென விழுந்தது. மோட்டார் சைக்கிளில் இருந்து இருவரும் கீழே விழுந்தனர். கோகிலா பலத்த பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார். பிரபுதேவா லேசான காயத்துடன் உயிர் மீட்டார். சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


