News February 16, 2025

சேலம்: இளம்பெண் பாலியல் பலாத்காரம்… கைது!

image

சேலம், தாரமங்கலம் அருகே ஆரூர்பட்டி கிராமம் மேட்டுமாரனூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (36), கல் உடைக்கும் தொழிலாளி. இவர் 2010ம் ஆண்டு அதே பகுதியில் வசித்து வந்த ஒரு இளம் பெண்ணை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இவரை நேற்று கிருஷ்ணகிரி அருகே தாரமங்கலம் போலீசார் கைது செய்தனர்.

Similar News

News December 6, 2025

சேலம்: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

image

சேலம் மாநகர காவல் துறை சார்பில், போக்குவரத்து விதிமுறைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை இயக்கும் போது, அதிக வெளிச்சம் கொண்ட கண்களை பூச செய்யும் விளக்குகளை பயன்படுத்த வேண்டாம் என்றும், இந்த விளக்குகளினால்எதிரே வரும் வாகனங்களில் பயணிப்போர் விபத்திற்கு உள்ளாக நேரிடும் என்பதால், வாகன ஓட்டிகள் இதுபோன்ற விளக்குகளை தவிர்க்க வேண்டும் என அறிவித்துள்ளது.

News December 6, 2025

தலைவாசல் அருகே மின்சாரம் தாக்கி நடந்த சம்பவம்!

image

கெங்கவல்லி தாலுகா ஆணியம்பட்டி புதூரைச் சேர்ந்த தொழிலாளி விஸ்வநாதன் (39) நேற்று தலைவாசல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே கட்டுமானப் பணியில் இருந்தபோது, மேலே சென்ற மின்கம்பி அவரது கையில் தொடுவதால் மின்சாரம் தாக்கி கீழே வீழ்ந்து கடுமையாக காயமடைந்தார். ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் வழியிலேயே உயிரிழந்தது தெரியவந்தது. தலைவாசல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News December 6, 2025

சேலத்தில் மேள தொழிலாளி கொலை!

image

அயோத்தியாப்பட்டணம் அடுத்த மின்னாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஜெயகாந்த் (23).மேளம் அடிக்கும் தொழில் செய்து வந்தார். இவரை கடந்த 1ல், இரவு 6 பேர் கொண்ட கும்பல் போதையில் தாக்கி தலையில் கல்லைத்தூக்கி போட்டு சென்றனர். இதில் பலத்த காயமடைந்த ஜெயகாந்த் உயிரிழந்தார். இந்த வழக்கில் ஏற்கனவே சிறுவன் உள்ளிட்ட 5 பேரை காரிப்பட்டி போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது இவ்வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்துள்ளனர்.

error: Content is protected !!