News April 10, 2025
சேலம் அரசு பேருந்தில் அட்டூழியம் 3 பேர் கைது

சேலத்தில் இருந்து வெள்ளிமலை நோக்கிச் சென்ற அரசு பேருந்தில் ஏறிய மூன்று பேர், உள்ளே செல்லாமல் படியிலேயே நின்றுகொண்டு, நடத்துனர் செந்தில்குமாரிடம் தகராறில் ஈடுபட்டதுடன்,அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து புகாரின் பேரில் ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தகராறில் ஈடுபட்ட மாணவர் விஜய் (20), ரீகன் (21) மற்றும் பெயிண்டர் விக்ரம் (23) ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.
Similar News
News December 6, 2025
பாதுகாப்பு வளையத்தில் சேலம் மாவட்டம்!

இன்று (டிச. 6) பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, சேலம் மாநகரம் முழுவதும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்காகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.இந்தநிலையில் நேற்று சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் சேலத்தில் உள்ள தனியார் விடுதிகள் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் தங்கியிருக்கிறார்களா என்ற கோணத்திலும் போலீசார் சோதனை!
News December 6, 2025
கெங்கவல்லி: காதல் திருமணம் செய்த பெண தற்கொலை!

சேலம்: கெங்கவல்லி அருகே, புனல்வாசலை சேர்ந்தவர் சரத் குமார், (25) இவர், பெரம்பலுார் சேர்ந்த திவ்யலட்சுமி (22) என்பவரை இரு ஆண்டுக்கு முன், காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் நேற்று வீட்டில் – தனியாக இருந்த திவ்லட்சுமி, தூக்கிட்டு உயிரிழந்தார். திருமணமான இரு ஆண்டில் தற்கொலை செய்ததால், கெங்கவல்லி போலீசார் வழக்குப் பதிந்து, ஆத்துார் ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரைத்தனர்.
News December 6, 2025
சேலம் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

சேலம் மாநகராட்சியின் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.


