News April 10, 2025

சேலம் அரசு பேருந்தில் அட்டூழியம் 3 பேர் கைது

image

சேலத்தில் இருந்து வெள்ளிமலை நோக்கிச் சென்ற அரசு பேருந்தில் ஏறிய மூன்று பேர், உள்ளே செல்லாமல் படியிலேயே நின்றுகொண்டு, நடத்துனர் செந்தில்குமாரிடம் தகராறில் ஈடுபட்டதுடன்,அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து புகாரின் பேரில் ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தகராறில் ஈடுபட்ட மாணவர் விஜய் (20), ரீகன் (21) மற்றும் பெயிண்டர் விக்ரம் (23) ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.

Similar News

News October 15, 2025

சேலம்: வேலையில்லா கொடுமை பட்டதாரி தற்கொலை!

image

சேலம், பள்ளப்பட்டி கோவிந்த கவுண்டர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மோசித்ராஜ் . இவர் (D.Pharm) படிப்பு முடித்தவர் ஆவார். வேலையில்லாமல் இருந்த இவர், சமீப காலமாக மதுவுக்கு அடிமையாகி மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் மோசித்ராஜ் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 15, 2025

சேலம்: கனரா வங்கியில் வேலை வேண்டுமா..?

image

சேலம் மக்களே.., கனரா வங்கியில் வேலை வேண்டுமா..? தற்போது ‘Trainee(administrative/office work) பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க நாளை மறுநாளே(அக்.17) கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 15, 2025

சேலத்தில் பெண் மர்மான முறையில் உயிரிழப்பு!

image

சேலம் அருகே கன்னங்குறிச்சி சின்ன திருப்பதி பகுதியைச் சேர்ந்த நந்தினி (35) நேற்று இரவு வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது கணவர் மோகன்ராஜ் மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். தகவல் அறிந்த கன்னங்குறிச்சி, போலீசார் நந்தினியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!