News April 10, 2025
சேலம் அரசு பேருந்தில் அட்டூழியம் 3 பேர் கைது

சேலத்தில் இருந்து வெள்ளிமலை நோக்கிச் சென்ற அரசு பேருந்தில் ஏறிய மூன்று பேர், உள்ளே செல்லாமல் படியிலேயே நின்றுகொண்டு, நடத்துனர் செந்தில்குமாரிடம் தகராறில் ஈடுபட்டதுடன்,அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து புகாரின் பேரில் ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தகராறில் ஈடுபட்ட மாணவர் விஜய் (20), ரீகன் (21) மற்றும் பெயிண்டர் விக்ரம் (23) ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.
Similar News
News September 15, 2025
சேலத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சேலம் மாவட்டத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு செப்.16 மற்றும் 17 மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதே போல் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்,வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
News September 15, 2025
சேலம்: ரயில்வே துறையில் வேலை!

சேலம் மக்களே.., இந்திய ரயில்வேயில் பணிபுரிய ஆசையா..? தற்போது காலியாக உள்ள 368 ’Section Controller’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தா போதுமானது. மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <
News September 15, 2025
சேலம் அரசு பொருட்காட்சிக்கு இதுவரை 55 ஆயிரம் பேர் வருகை

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே அரசு பொருட்காட்சி கடந்த ஆடி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசின் 32 அரங்குகள் அத்துடன் ராட்டினம், ரயில்கள், உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 55,245 பேர் பார்வையிட்டுள்ளனர். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை தினங்களில் அதிக அளவில் மக்கள் இந்த அரசு பொருட்காட்சிக்கு வருவதாக மாநகராட்சிஅதிகாரிகள் மேலும் 18 நாட்கள் நடைபெறும்.