News April 23, 2025
சேலம்: அரசுப் பேருந்துகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டத்தில் உள்ள அரசு டவுன் பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகள் என மொத்தம் 1,900 பேருந்துகளிலும் கடந்த மாதம் முதல் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் டிஜிட்டல் பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. வெகு தூரம் செல்லும் பேருந்துகளில் இந்த பரிவர்த்தனை நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. எனினும் டவுன் பேருந்துகளில் வரவேற்பு கிடைக்கவில்லை.
Similar News
News November 26, 2025
சேலம்: அதிமுக பிரமுகர் கைது பரபரப்பு

சேலம் மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் சங்கர் என்கிற சேகோ சங்கர். இவர் ஆத்தூர் கோரி தெரு மல்லிகா கண்ணன் திருமண மண்டபம் அருகில் வசித்து வரும் திவ்யா என்கிற பாத்திமா என்ற பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக இன்று அப்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் சங்கரை ஆத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதனால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
News November 26, 2025
சேலம் அருகே ஜேசிபி மோதி பலி!

சேலம் வலசையூர் பகுதியை சேர்ந்த பாலாஜி (26) கடந்த 22ஆம் தேதி டூ-வீலரில் அயோத்தியாப்பட்டணம் நோக்கி சென்ற போது, வான்ராயன் காடு மேடு அருகே முன்பிருந்த ஜேசிபி திடீர் பிரேக் அடிப்பதால், அதன் பக்கெட் அவரது தலையில் மோதி பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து காரிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News November 26, 2025
சேலம் அருகே ஜேசிபி மோதி பலி!

சேலம் வலசையூர் பகுதியை சேர்ந்த பாலாஜி (26) கடந்த 22ஆம் தேதி டூ-வீலரில் அயோத்தியாப்பட்டணம் நோக்கி சென்ற போது, வான்ராயன் காடு மேடு அருகே முன்பிருந்த ஜேசிபி திடீர் பிரேக் அடிப்பதால், அதன் பக்கெட் அவரது தலையில் மோதி பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து காரிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


