News April 25, 2025

சேலம்: அனைத்து கிராம ஊராட்சிகளுக்கு ஆட்சியர்  உத்தரவு

image

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், மே 1 ஆம்  தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கண்டிப்பாக கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும் தூய்மை பாரத திட்டம் உள்ளிட்ட மத்திய மாநில அரசுகளின் மக்களுக்கான நலத்திட்டங்கள் அனைத்தையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளக்கக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

Similar News

News December 13, 2025

ஆத்தூர் அருகே ஷாக் கொடுத்த அதிகாரிகள்!

image

ஆத்தூர்:கெங்கவல்லி சுவேத நதி – நடுவலூர் ஏரி நீர்வழி வாய்க்காலை ஆக்கிரமித்துக் 30 வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இவர்களுக்கு செப். 12 அன்று ஓதியத்தூரில் மாற்று இடம் ஒதுக்கப்பட்டு டிச.8க்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அதிகாரிகள் அறிவுறித்தினர். இந்தநிலையில் கூடுதல் அவகாசம் கேட்ட 6 பேரின் வீடுகளுக்கு வழங்கப்பட்டிருந்த மின் இணைப்புகளை துண்டித்த அதிகாரிகள் உடனடியாக காலிசெய்ய உத்தரவிட்டனர்.

News December 13, 2025

சேலத்தில் ஒட்டப்பட்டுள்ள பரபரப்பு போஸ்டர்!

image

சேலம் புதிய பேருந்து நிலையம் அடுத்துள்ள மூன்று ரோடு பகுதியில் உள்ள தனியார் காம்பவுண்ட் சுவரில் திமுக இளைஞரணியின் மாவட்ட துணை அமைப்பாளர் சி.எம்.எஸ். மசூது என்பவரின் பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் “எந்த ஷா வந்தாலும், தமிழ்நாட்டுக்கு குஸ்கா தான்,” என்று பெரிய எழுத்துகளில் அச்சிடப்பட்டிருந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News December 13, 2025

உணவுப் பொருள் விநியோகம் செய்ய அரிய வாய்ப்பு!

image

சேலம் மாவட்ட மகளிர் திட்டத்தின் கூட்டங்கள், பயிற்சிகளுக்குத் தேநீர், சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்குவதற்கான ஒப்பந்தம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்படவுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள குழுக்கள் தங்கள் விலைப்புள்ளிகளை டிச.26 அன்று மாலை 5.00 மணிக்குள் சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் பிருந்தா தேவி அறிவிப்பு!

error: Content is protected !!