News November 3, 2025
சேலம்: அதிமுக பிரமுகர் மீது கொடூர தாக்குதல்!

ஏற்காடு அடிவாரத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த பிரமுகர் அருண் என்பவரை, நேற்று (நவம்பர் 3) சுமார் 20 பேர் கொண்ட கும்பல் கத்தி மற்றும் இரும்புக் கம்பி போன்ற ஆயுதங்களைக் கொண்டு கொலை முறற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.இந்த சம்பவத்தில் அருண் லேசான வெட்டுக் காயங்களுடன் உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து, 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Similar News
News December 15, 2025
சேலம்: தொழிலாளி மர்ம உயிரிழப்பு

சேலம் குரங்கு சாவடி பகுதியில் உள்ள மேம்பாலத்தின் கீழ், ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். ஓமலூர் சேர்ந்த மணி (56) என்பதும், சாலையோரம் தங்கிக் கொண்டு கிடைத்த வேலையை செய்து அதில் உயிர் வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தது தெரிந்தது.
News December 15, 2025
ஆத்தூரில் வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது

சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டையில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக ஆத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் போலீசார் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது வீட்டில் மது பாட்டில்களை விற்பனை செய்த ஜீவா, 60. அதே பகுதியைச் சேர்ந்த அமராவதி, 63. ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 15, 2025
ஆத்தூரில் வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது

சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டையில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக ஆத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் போலீசார் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது வீட்டில் மது பாட்டில்களை விற்பனை செய்த ஜீவா, 60. அதே பகுதியைச் சேர்ந்த அமராவதி, 63. ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


