News March 27, 2025
சேலத்தில் 41,456 மாணவர்கள் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர்

தமிழக முழுவதும் பத்தாம் வகுப்பு தேர்வு நாளை (28.03.2025) தொடங்க உள்ளது. சேலம் மாவட்டத்தை பொருத்தவரை, அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என 522 பள்ளிகளை சேர்ந்த 21,008 மாணவர்கள், 20,448 மாணவிகள் என மொத்தம் 41,456 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்கு மாவட்ட முழுவதும் 183 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Similar News
News December 7, 2025
தாரமங்கலத்தில் துடிதுடித்து பலி!

இடைப்பாடி அருகே கொல்லம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னம்மாள்(70). இவரது பேரன் அஜித்குமார் (25), கூலி தொழிலாளி. இவர்கள், நேற்று காலை சொந்த வேலையாக டூவீலரில் இளம்பிள்ளை புறப்பட்டனர். தாரமங்கலம் அருகே வந்தபோது, பின்னால் வந்த கார் டூவீலர் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த சின்னம்மாள், பேரன் கண் முன்பே துடி துடித்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 7, 2025
சேலம் வழியாக செல்லும் ரயில் சேவை நீட்டிப்பு!

ஹைதராபாத்தில் இருந்து சேலம், ஈரோடு,திருப்பூர், போத்தனூர் வழியாக கொல்லத்திற்கு வாராந்திர ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.ஜனவரி 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 17ஆம் தேதி சனிக்கிழமை ஹைதராபாத்தில் இருந்து இரவு 11.10க்கு புறப்பட்டு திங்கட்கிழமை காலை 7.10க்கு கொல்லம் சென்று அடைகிறது. அதேபோல கொல்லத்திலிருந்து 19ஆம் தேதி காலை 10.45 க்கு புறப்பட்டு மறுநாள் மாலை 5.30க்கு ஹைதரபாத் போகிறது
News December 7, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்


