News March 27, 2025

சேலத்தில்  41,456 மாணவர்கள் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர்

image

தமிழக முழுவதும் பத்தாம் வகுப்பு தேர்வு நாளை (28.03.2025) தொடங்க உள்ளது. சேலம் மாவட்டத்தை பொருத்தவரை, அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என 522 பள்ளிகளை சேர்ந்த 21,008 மாணவர்கள், 20,448 மாணவிகள் என மொத்தம் 41,456 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்கு மாவட்ட முழுவதும் 183 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Similar News

News December 4, 2025

சேலம்: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

image

சேலம் மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News December 4, 2025

சேலத்தில் நடந்த கொடூரம்: 20 ஆண்டு சிறை!

image

சேலம் செட்டிச்சாவடி அண்ணாநகரை சேர்ந்த கார் டிரைவர் பிரகாஷ்ராஜ் (29), கடந்த 2022-ம் ஆண்டு 14 வயதுடைய 9-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், பிரகாஷ்ராஜ் கைது செய்தனர். சேலம் போக்சோ கோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணையில், நேற்று பிரகாஷ்ராஜுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

News December 4, 2025

ஆத்தூர் அருகே விபசாரம்..அதிரடி கைது!

image

ஆத்தூர் அருகே பைத்தூர் ரோடு பகுதியில் விபச்சாரம் நடைபெறுவதாக ஆத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்திக்கு தகவல் வந்ததின் பெயரில், போலீசார் விரைந்து சென்று சோதனை செய்தனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 34) என்பவர் 2 பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.இதனையடுத்து சுரேஷை கையும் களவுமாக பிடித்த போலீசார், பெண்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!