News March 3, 2025

சேலத்தில் +2 தேர்வில் 99.22% தேர்வு எழுதினர் 

image

சேலம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற 12ஆம் வகுப்பு முதல் தேர்வான தமிழ் தேர்வில் 151 மையங்களில் பயிலும் மாணவர்கள் 37,161 மற்றும் தனித் தேர்வுகள் 213 என மொத்தம் 37,374 மாணவர்கள் தேர்வெழுத விண்ணப்பித்தனர். இதில் இன்றைய தமிழ் தேர்வில் 36,903 பள்ளி மாணாக்கர்களும், 180 தனித்தேர்வர்கள் என 37,083 மாணவர்கள் மட்டுமே பங்கேற்றனர். இது சதவீதத்தில் 99.22 ஆகும்.

Similar News

News March 4, 2025

பிளஸ் 2 பொதுத்தேர்வு- சேலத்தில் 280 பேர் ஆப்சென்ட்

image

சேலம் மாவட்டத்தில் 151 தேர்வு மையங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது. தமிழ் பாடத் தேர்வை 37,095 மாணவ, மாணவிகள் எழுதினர். 280 பேர் தேர்வு எழுத வரவில்லை என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் தெரிவித்துள்ளார். இதனிடையே, 300 பறக்கும் படை அலுவலர்கள், 3,100 அறை கண்காணிப்பாளர்கள், 3,500-க்கும் மேற்பட்ட தேர்வு பணியாளர்கள் தேர்வுப் பணியில் ஈடுபட்டனர்.

News March 4, 2025

சேலத்தில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி

image

பழனிவேல் என்பவர் பனமரத்துப்பட்டி காந்தி நகர் பகுதியில் கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவரது மகன் மவுலீஸ்வரன் (வயது 13) 8ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று கோழி இறைச்சி சுத்தம் செய்யும் எந்திரத்தை மவுலீஸ்வரன் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மாணவனை மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பனமரத்துப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 4, 2025

பைக் நேருக்கு நேர் மோதல் ஒருவர் உயிரிழப்பு

image

சேலம், பெரிய வனவாசியை சேர்ந்த மணிவேல் என்பவர் அமரகுந்தியில் உள்ள தனது தங்கையை காண இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மல்லிக்குந்தம் அருகே எதிரே வந்த இருசக்கர வாகனத்துடன் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியதில் மணிவேல் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!