News May 15, 2024

சேலத்தில் பெரும் விபத்து தவிர்ப்பு

image

சேலம் நெய்க்காரப்பட்டி மேம்பாலத்தின் வழியாக சரக்கு வேன் ஒன்றில் தகர அட்டைகள் கொண்டு சென்ற போது பாரம் தாங்காமல் திடீரென சரிந்து விழுந்தது. அந்த நேரத்தில் சாலையில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திடீரென தகர அட்டை சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Similar News

News December 13, 2025

சேலத்தில் குறைந்த விலையில் பைக், கார் வேண்டுமா?

image

சேலம் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட நான்கு, மூன்று மற்றும் இருசக்கர வாகனங்கள் வரும் டிச.23 அன்று லைன்மேட்டில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்பட உள்ளன. இதில் பங்கேற்க விரும்புபவர்கள் வாகன வகையைப் பொறுத்து காலை 8:00 மணி முதல் 10:00 மணிக்குள் முன்பணம் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04272431200, 94981 02546. 94981 66304 அழைக்கவும். உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் செய்யவும்.

News December 13, 2025

மேட்டூரில் தலை துண்டித்து பூசாரி கொலை!

image

சேலம் மேட்டூரை அடுத்த சின்னக்காவூர் பகுதியைச் சேர்ந்த 70 வயதான வெங்கட்ராமன், அனல்மின் நிலையத்தில் உள்ள கருப்பசாமி கோவிலில் பூசாரியாக பணியாற்றி வந்தவர். நேற்று மதியம் சேலம் செல்லும் சாலையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். அவரது உடல் சைக்கிளுடனும், தலை சுமார் 50 அடி தூரத்திலும் கிடந்தது. இந்த நிலையில் உடலை மீட்ட கருமலைக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 13, 2025

சேலம் ரவுடி மனைவி எடுத்த விபரீத முடிவு!

image

சேலம், அழகாபுரம் மிட்டாபுதுார் கான்வென்ட் சாலையை சேர்ந்த, ரவுடி அஜித்குமார். இவரது மனைவி சவுமியா (30). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த அஜித்குமார், மனைவியிடையே தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சவுமியா தற்கொலை செய்து கொண்டார். அழகாபுரம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!