News August 26, 2024
சேலத்தில் பூண்டு விலை கிடுகிடு உயர்வு

சேலம் மாவட்டம் ஒமலூர் சந்தையில் வரத்து குறைந்ததால் ஒரு கிலோ பூண்டு விலை ரூ.450ஐ தொட்டது. கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பூண்டு கொண்டு வரப்படுகிறது. வழக்கமாக 100 டன் வர வேண்டிய சந்தைக்கு, 20 டன் அளவு மட்டுமே பூண்டு வந்ததாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். நீலகிரி மலை பூண்டு ரூ.350 முதல் ரூ.500 வரை விற்பனையாகிறது.
Similar News
News December 4, 2025
சேலம்: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

சேலம் மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.
News December 4, 2025
சேலத்தில் நடந்த கொடூரம்: 20 ஆண்டு சிறை!

சேலம் செட்டிச்சாவடி அண்ணாநகரை சேர்ந்த கார் டிரைவர் பிரகாஷ்ராஜ் (29), கடந்த 2022-ம் ஆண்டு 14 வயதுடைய 9-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், பிரகாஷ்ராஜ் கைது செய்தனர். சேலம் போக்சோ கோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணையில், நேற்று பிரகாஷ்ராஜுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
News December 4, 2025
ஆத்தூர் அருகே விபசாரம்..அதிரடி கைது!

ஆத்தூர் அருகே பைத்தூர் ரோடு பகுதியில் விபச்சாரம் நடைபெறுவதாக ஆத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்திக்கு தகவல் வந்ததின் பெயரில், போலீசார் விரைந்து சென்று சோதனை செய்தனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 34) என்பவர் 2 பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.இதனையடுத்து சுரேஷை கையும் களவுமாக பிடித்த போலீசார், பெண்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.


