News June 27, 2024
சேலத்தில் பலி எண்ணிக்கை 22ஆக உயர்வு

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த சம்பவம் தமிழாக்கத்தை சோகத்தில் ஆழ்த்தியது. சேலம் அரசு மருத்துவமனையில் 48 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில், இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நேற்று அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த கர்ணாபுரத்தை சேர்ந்த சரசு (52) என்ற பெண், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News September 16, 2025
சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் மாநகராட்சியில் இன்று (செப்டம்பர் 16) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் விவரங்களும், தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம் மற்றும் அஸ்தம்பட்டி ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளது. புகார் அல்லது தகவல்களை தெரிவிக்க, மேலே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
News September 16, 2025
சேலம்: தமிழ் தெரியுமா? ரூ.71,000 சம்பளம்!

சேலம் மக்களே, தமிழில் எழுத படிக்க தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர், இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 16, 2025
சேலத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சேலம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று (செப்.16) கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக சேலம் மாநகரத்தில் உள்ள பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. வரும் நாட்களில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.