News August 7, 2024

சேலத்தில் திமுக சார்பில் அமைதி பேரணி

image

முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி ஆறாம் ஆண்டு நினைவு நாளையொட்டி இன்று சேலம் மத்திய மாவட்ட திமுகவின் சார்பில் அமைதி பேரணி மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமையில் இன்று நடைபெற்றது. பின்னர் கருணாநிதி திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்வில் திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News

News November 22, 2025

சேலம் அருகே பெண் உடல் நசுங்கி பலி!

image

நாமக்கல்லை சேர்ந்த தம்பதி யாசர் – அபிதா. இருவரும் நேற்று பைக்கில் ராசிபுரத்தில் இருந்து சேலம் வழியாக அரூருக்கு புறப்பட்டனர். மாசிநாயக்கன்பட்டி பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் சென்றபோது பின்னால் வந்த டேங்கர் லாரி பைக் மீது உரசியவாறு சென்றதால் நிலைதடுமாறி கீழே விழுந்த அபிதா, லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 22, 2025

தலைவாசல் அருகே டவுசர் கொள்ளையர்கள்!

image

தலைவாசல் அருகே நத்தகரை கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவர், கேரள மாநிலத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயசூர்யா (25). இவர் வீட்டின் பின் பக்க கதவை பூட்டாமல் தூங்கி உள்ளார். நள்ளிரவில் முகமூடி அணிந்த டவுசர் கொள்ளையர்கள் 2 பேர், வீட்டுக்குள் நுழைந்து அவரை மிரட்டி 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

News November 22, 2025

ரயில் பயணிகள் கவனத்திற்கு

image

சேலம் முதல் ஈரோடு வரை மெமு பாசஞ்சர் ரயில் சேவை நவம்பர் 24-ந் தேதி முதல் தொடங்குகிறது. சேலம் – ஈரோடு மெமு ரயில் (66621) சேலத்தில் காலை 6.15 மணிக்கு புறப்பட்டு மகுடஞ்சாவடி, சங்ககிரி, காவிரி வழியாக 7.25 மணிக்கு ஈரோடு சென்றடையும். ஈரோட்டில் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு 8.45 மணிக்கு சேலம் வந்தடையும். (ஷேர் பண்ணுங்க)

error: Content is protected !!