News September 28, 2024

சேலத்தில் செல்லப்பிராணிகளை வளர்ப்போர் கவனத்திற்கு

image

உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவ நிலையங்களிலும் நாளை செல்லப்பிராணிகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். இம்முகாம்களில் தங்களது செல்லப் பிராணிகளுக்கு வெறி நோய் தடுப்பூசி போட்டு செல்லப்பிராணிகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Similar News

News November 28, 2025

சேலம்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திறனறிவு தேர்வு

image

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், மாணவர்கள் இடையே அறிவியல் மனப்பான்மையை ஊக்குவிக்கும் வகையில், விஞ்ஞான துளிர் அறிவியல் மாத இதழுக்கு மாநில அளவிலான துளிர் திறனறிதல் தேர்வு சேலம் மாவட்டத்தில் 68 தேர்வு மையங்களில் துவக்க நிலை பிரிவில் 712 மாணவர்களும், நடுநிலை 1,449 பேர், உயர்நிலை பிரிவில் 270 பேர், மேல்நிலை பிரிவில் 85 பேர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் செய்திருந்தது.

News November 28, 2025

சேலம் மாநகர காவல்துறை எச்சரிக்கை

image

சேலம் காவல்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: செய்தி, ஆன்லைன் கடன் ஆப்களில் அதிகரித்து வரும் மோசடிகளை முன்னிட்டு பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை அறிவித்துள்ளது. அறியாத பயன்பாடுகள் மூலம் கடன் விண்ணப்பிக்க வேண்டாம் என்றும், தனிப்பட்ட தகவல்கள், அடையாள ஆவணங்கள், வங்கி விவரங்களை பகிர்வது பெரிய அபாயத்திற்கு வழிவகுக்கும் என்றும் கூறியது. மேலும் இது குறித்து தகவல் அளிக்க 1930 தொடர்பு கொள்ளலாம்.

News November 28, 2025

ஒளவையார் விருது பெற தகுதியானவர் விண்ணப்பிக்கலாம்

image

ஒளவையார் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடும் பெண்களுக்கான ஒளவையார் விருது மகளிர் தினத்தில் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியான நபர்கள் https// awards.tn.gov.in என்ற இணையதளத்தில் டிசம்பர்-31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அறிவிப்பு!

error: Content is protected !!