News September 13, 2024

சேலத்தில் செப்.30 வரை கால அவகாசம்

image

அரசினா் மகளிா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் ராஜன் செய்திக்குறிப்பில், அரசினா் மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியில் சோ்வதற்கான கால அவகாசம் செப்.30ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பயிற்சி முடித்த பின்னா் முன்னணி நிறுவனங்களின் நோ்காணல் நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு அரசினா் மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் செயல்பட்டுவரும் சோ்க்கை உதவி மையத்தை அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

Similar News

News November 24, 2025

சேலம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

சேலம் மாவட்ட காவல்துறை, தொடர்ந்து பெய்து வரும் மழையை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு முக்கிய முன்னெச்சரிக்கை அறிவுரை வழங்கியுள்ளது. மழை நேரங்களில் மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர் பகுதிகள் மற்றும் பெரிய மரங்களின் கீழ் தங்குவது ஆபத்தானது என எச்சரிக்கப்பட்டது. மின்சாரம் கசிவு, மரம் சரிவு போன்ற அபாயங்கள் அதிகமாக உள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News November 24, 2025

மாற்றுத் திறனாளிகளுக்கு நல உதவி வழங்கிய ஆட்சியர்!

image

சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நல உதவிகள் கோரி விண்ணப்பித்திருந்த பயனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் நான்கு நபர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மொத்தம் ரூபாய் 2.5 லட்சம் மதிப்பிலான நவீன இரு சக்கர நாற்காலி வாகனங்களை வழங்கினார். அப்போது மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் உடன் இருந்தனர்.

News November 24, 2025

ஏற்காடு ட்ரக்கிங் செல்வோர் கவனத்திற்கு!

image

ஏற்காடு அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி–குண்டூர், கொண்டப்பநாயக்கன்பட்டி–குண்டூர் டிரெக்கிங் ரூட்டுகளுக்கான ஆன்லைன் புக்கிங் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேவையான ஏற்பாடுகள் முடிந்தவுடன் புக்கிங் மீண்டும் தொடங்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!