News April 23, 2025
சேலத்தில் கொலை முயற்சி 2 பெண்கள் சிறையில்!

ஆத்தூர் அருகே குப்பைக் கொட்டும் தகராறில் லாரியை ஏற்றி கொல்ல முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் கொலை முயற்சி, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்பட 4 பிரிவுகளில் பாலமுருகன், அன்பரசி,பூபதி மற்றும் உறவினர் கதிரவன் ஆகியோர் மீது ஆத்தூர் ஊரக போலீசார் வழக்கு பதிந்தனர். உள்பட அன்பரசி, செல்வி ஆகிய பெண்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.
Similar News
News November 20, 2025
BREAKING:சேலத்திலிருந்து பிரசாரத்தை தொடங்கும் விஜய்!

கரூர் கூட்ட நெரிசல் 41 பேர் உயிரிழந்தநிலையில், விஜயின் அனைத்து பிரச்சாரங்களும் ரத்து செய்யப்பட்டது இந்தநிலையில் தற்போது அவர் சேலத்தில் இருந்து டிசம்பர் நான்காம் தேதி தனது பிரசாரத்தை தொடங்க உள்ளார். இதற்காக அனுமதி கோரி சேலம் மாநகர காவல்துறை ஆணையரகத்தில் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் தலைமையிலான நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.
News November 20, 2025
BREAKING:சேலம் கமிஷனர் அலுவலகம் முன் தீக்குளிப்பு!

சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் முன்பு இன்று காலை வாலிபர் ஒருவர் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் காயமடைந்த வாலிபர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தற்கொலைக்கு முயன்ற அந்த வாலிபர் யார்? எதற்காக காவல் ஆணையாளர் அலுவலகத்தின் முன் தற்கொலைக்கு முயன்றார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 20, 2025
சேலம்: மூளை தின்னும் வைரஸ் ? அமைச்சர் சொன்ன தகவல்!

கேரளாவில் ‘மூளை தின்னும் அமீபா’ வைரஸ் அதிகரித்து வரும்நிலையில் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் ஆறுகள், குளங்களில் குளிக்கும் போது மூக்கு மற்றும் வாய் பகுதிகளை நன்றாக மூடியபடி குளிக்க வேண்டும் என அறிவுறித்தப்பட்டு இருந்தது.இது குறித்து சேலத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: சபரிமலை ஆன்மீக சுற்றுலாவுக்கும்,அமீபா பரவலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை; பம்பை ஆற்றில் அமீபா வைரஸ் இருக்காது என்றார்


