News August 7, 2024
சேலத்தில் களைகட்டிய திருவிழா: போலீஸ் குவிப்பு

பிரசித்திப் பெற்ற சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோயிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு இன்று கோயிலில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய தோரணங்கள் பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது. மேலும் கோவில் வளாகத்தை சுற்றியும் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது.
Similar News
News December 5, 2025
சேலத்தில் கல்லை போட்டு கொல்ல முயற்சி: 5 பேருக்கு காப்பு!

சேலம்: அயோத்தியாப்பட்டணம், மின்னாம்பள்ளி அருகே கக்கன் காலனியை சேர்ந்த மேள தொழிலாளியான ஜெயகாந்த் (23) என்பவரை கடந்த, 1 இரவு, 6 பேர் கொண்ட கும்பல் தலையில் கல்லை போட்டு கொல்ல முயன்றனர். இந்த வழக்கில் 17 வயது சிறுவன் உள்பட 3 பேரை காரிப்பட்டி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். தொடர்ந்து மின்னாம்பள்ளியை சேர்ந்த மணிகண்டன் (19), கூட்டாத்துப்பட்டி அருள்பிரகாஷ் (19) ஆகியோர நேற்று கைது செய்தனர்.
News December 5, 2025
சேலம் கலெக்டர் கடும் எச்சரிக்கை!

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில், வாக்காளர் கணக்கீட்டு படிவம் 85 சதவீதம் மட்டுமே திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. வாக்காளர் படிவத்தை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் ஒப்படைத்து,வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம் பெறுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.படிவத்தை ஒப்படைக்காத வாக்காளர்களின் பெயர்கள் வரைவு பட்டியலில் இடம் பெறாது என்று தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி கூறியுள்ளார்.SHAREit
News December 5, 2025
சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (டிச.04) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விபரம் வெளியிடப்பட்டது.


