News September 14, 2024

சேலத்தில் இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤ நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதால் சேலத்தில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ➤ மேட்டூர் அணைக்கு 13,217 கனஅடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. ➤ கொளத்தூர் அருகே சிறுத்தை நடமாட்டத்தில், மக்கள் அச்சமடைந்துள்ளனர். ➤ சேலத்தில் 162 மையங்களில் நடைபெற்ற குருப் 2 தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

Similar News

News December 2, 2025

சேலத்தில் கடன் தொல்லையால் நேர்ந்த சம்பவம்!

image

சேலம் அம்மாபேட்டை மாருதிநகர் 3வது கிராஸ் பகுதியில் வசிக்கும் சரவணன் (42) சலவை தொழில் செய்து வந்தார். ரூ.3 லட்சம் கடன் பிரச்சனையால் கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனையடைந்த அவர் நேற்று காலை தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது அவர் தீவிர சிகிச்சையில் உள்ளார். அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 2, 2025

சங்ககிரி அருகே விபத்து இளைஞர் பலி!

image

சேலம் கரையான் காடு பகுதியைச் சேர்ந்தவர் நவீன்(21) வயதான இவர் சங்ககிரி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் நேற்று பணி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த போது மேக்காடு அருகே ஜீப் ஒன்று எதிர்பாராத விதமாக நவீனின் பைக்கின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நவீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சங்ககிரி போலீசார் விசாரணை நடத்தினர்.

News December 2, 2025

சேலம் வழியாக செல்லும் ரயிலில் கூடுதலாக ஏசி பெட்டி இணைப்பு!

image

சபரிமலை சீசனை முன்னிட்டு ரயில் பயணிகளின் வசதிக்காக சேலம் வழியாக இயக்கப்படும் காக்கிநாடா-கோட்டயம்-காக்கிநாடா வாராந்திர சிறப்பு ரயிலில் (07109/07110) கூடுதலாக இரண்டுக்கு ஏசி பெட்டி இணைத்து இயக்கப்படுகிறது. இன்று (டிச.01] முதல் வரும் ஜனவரி 19-ஆம் தேதி வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!