News August 9, 2024
சேலத்திற்கு புதிய போலீஸ் அதிகாரிகள்

தென் சேலம் துணை ஆணையர் மதிவாணன் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக பெரம்பலூர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு கூடுதல் எஸ்பியான வேல்முருகன் எஸ்பியாக பதவி உயர்வுபெற்று துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் ஆவடி ஆணையரக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு கூடுதல் எஸ்பியான கீதா எஸ்பியாக பதவி உயர்வு பெற்று சேலம் தலைமையிடத்து துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News December 17, 2025
டிசம்பர் 19 விவசாயக் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை பத்தரை மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் விவசாயிகள் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று விவசாயம் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
News December 16, 2025
சேலத்தில் இரவு நேரத்தில் அவசர உதவியா? உடனே அழையுங்கள்!

சேலம் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் ஓமலூர்,சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். இதனை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News December 16, 2025
சேலத்தில் நாளை இங்கெல்லாம் பவர்கட்!

வேம்படிதாளம், இளம்பிள்ளை, சித்தர்கோவில், இடங்கணசாலை, வேம்படித்தாளம், காகாபாளையம், மகுடஞ்சாவடி, சீரகாபாடி, எடப்பாடி நகரம், வி.என் பாளையம், வேப்பநேரி, தாதாபுரம், குரும்பப்பட்டி, வேலம்மாவசம், மலையனூர், தங்காயூர், அம்மன்காட்டூர், கொங்கணாபுரம் மற்றும் எருமைப்பட்டி,பூலாம்பட்டி,பில்லுக்குறிச்சி, வளைசெட்டியூர், வன்னியநகர், சித்தூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை!


