News August 9, 2024
சேலத்திற்கு புதிய போலீஸ் அதிகாரிகள்

தென் சேலம் துணை ஆணையர் மதிவாணன் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக பெரம்பலூர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு கூடுதல் எஸ்பியான வேல்முருகன் எஸ்பியாக பதவி உயர்வுபெற்று துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் ஆவடி ஆணையரக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு கூடுதல் எஸ்பியான கீதா எஸ்பியாக பதவி உயர்வு பெற்று சேலம் தலைமையிடத்து துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News December 4, 2025
சேலம்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

சேலம் மக்களே ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, அல்லது எடை குறைவாக வழங்குவது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் அல்லது சேலம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரிய படுத்துங்க.
News December 4, 2025
சேலம்: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

சேலம் மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.
News December 4, 2025
சேலத்தில் நடந்த கொடூரம்: 20 ஆண்டு சிறை!

சேலம் செட்டிச்சாவடி அண்ணாநகரை சேர்ந்த கார் டிரைவர் பிரகாஷ்ராஜ் (29), கடந்த 2022-ம் ஆண்டு 14 வயதுடைய 9-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், பிரகாஷ்ராஜ் கைது செய்தனர். சேலம் போக்சோ கோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணையில், நேற்று பிரகாஷ்ராஜுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


