News April 25, 2025
சேரன்மகாதேவியில் பெண்ணுக்கு வெட்டு போலீசார் விசாரணை

நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி ராமசாமி கோவில் மேல தெற்கு தெருவை சேர்ந்தவர் சுந்தரி செல்வி (54). இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த கிருஷ்ணன் (32) என்பருவருக்கும் இடையே ஆடு மேய்ப்பதில் தகராறு ஏற்பட்டதில் முன் விரோதம் இருந்து வந்தது. நேற்று (ஏப்.24) மீண்டும் ஏற்பட்ட பிரச்சனையில் கிருஷ்ணன் சுந்தரி செல்வி முதுகில் அரிவாளால் வெட்டினார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணனை தேடி வருகின்றனர்.
Similar News
News November 28, 2025
நெல்லை: 8 மாதத்திற்கு பின் கொலையாளி கைது

திருநெல்வேலி, முக்கூடல் பாப்பாக்குடி சேர்ந்த துப்புரவு தொழிலாளி பால்ராஜ் நாகர்கோவில் அண்ணா பஸ் ஸ்டாண்டில் தடுக்கி விழுந்து இறந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் பிணக்கூறாய்வு அடிப்படையில் கொலை வழக்காக பதிவு செய்யபட்டது. வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை 8 மாதங்களுக்கு பிறகு திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த கொலையாளி சுரேஷ் (29) என்பவரை கோட்டார் போலீசார் கைது செய்தனர்.
News November 28, 2025
நெல்லை மாவட்ட மாற்றுத்திறன் மாணவர்கள் கவனத்திற்கு!

2025 – 26ம் ஆண்டிற்கான மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் பாளை வட்டார வள மையம் சார்பில் கிறிஸ்துராஜா மேல்நிலை பள்ளியில் 2ம் தேதி காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது. முகாமில் 0 – 18 வயது வரையிலான மாற்றுத்திறன் உடைய மாணவர்கள் உரிய ஆவணங்களுடன் பங்கேற்கலாம். மருத்துவ உதவி உபகரணங்கள் அளவீடு பஸ் பாஸ், ரயில் பாஸ் உள்ளிட்ட நலத் திட்டங்களைப் பெற இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம்.
News November 28, 2025
நெல்லை மாவட்ட மாற்றுத்திறன் மாணவர்கள் கவனத்திற்கு!

2025 – 26ம் ஆண்டிற்கான மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் பாளை வட்டார வள மையம் சார்பில் கிறிஸ்துராஜா மேல்நிலை பள்ளியில் 2ம் தேதி காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது. முகாமில் 0 – 18 வயது வரையிலான மாற்றுத்திறன் உடைய மாணவர்கள் உரிய ஆவணங்களுடன் பங்கேற்கலாம். மருத்துவ உதவி உபகரணங்கள் அளவீடு பஸ் பாஸ், ரயில் பாஸ் உள்ளிட்ட நலத் திட்டங்களைப் பெற இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம்.


