News April 25, 2025
சேரன்மகாதேவியில் பெண்ணுக்கு வெட்டு போலீசார் விசாரணை

நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி ராமசாமி கோவில் மேல தெற்கு தெருவை சேர்ந்தவர் சுந்தரி செல்வி (54). இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த கிருஷ்ணன் (32) என்பருவருக்கும் இடையே ஆடு மேய்ப்பதில் தகராறு ஏற்பட்டதில் முன் விரோதம் இருந்து வந்தது. நேற்று (ஏப்.24) மீண்டும் ஏற்பட்ட பிரச்சனையில் கிருஷ்ணன் சுந்தரி செல்வி முதுகில் அரிவாளால் வெட்டினார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணனை தேடி வருகின்றனர்.
Similar News
News September 18, 2025
நெல்லை: உங்க ரேஷன் கார்டடை CHECK பண்ணுங்க…

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
1.AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
2.PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
3.NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
4.NPHH: சில பொருட்கள் மட்டும்.உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <
News September 18, 2025
நெல்லை: தார் பீப்பாய்களை திருடிய வாலிபர்

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள மாலேசமங்கலம் பகுதியில் ரோடு போடுவதற்காக ஏராளமான தார் பீப்பாய்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கடந்த சில தனங்களுக்கு முன்பு 58 தார் பீப்பாய்கள் காணாமல் போனது. இதுக்குறித்து திருச்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் நெல்லை மாவட்டம் பேட்டையை சேர்ந்த ஷேக் மைதீன் என தெரியவந்தது. இதையடுத்து திருச்சூர் போலீசார் ஷேக் மைதீனை கைது செய்தனர்.
News September 18, 2025
நெல்லை இளைஞர்களே நீங்க எதிர்பார்த்த நாள்!

நெல்லை மாவட்டத்தில் நாளை செப்.19 காலை தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் சிதம்பரம் நகர், பெருமாள்புரத்தில் நடைபெற உள்ளது. . சம்பளம் தகுதிக்கேற்ப 50,000 – 15,000 வரை வழங்கபட உள்ளது. 355க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்பு காத்து கொண்டு உள்ளது. SO நாளைக்கு MISS பண்ணிடாதீங்க.. இங்கு <