News May 16, 2024
சேத்துப்பட்டு அருகே விபத்தில் ஒருவர் பலி

திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட் அடுத்த நம்பேடு கிராமத்தைச் சேர்ந்த வேம்புகண்ணு என்பவர் நேற்று மாலை போளூர் சேத்பட் சாலை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத லாரி மோதி பலத்த காயங்களுடன் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 25, 2025
வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் மற்றும் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணிகளை உடனடியாக விரைவாக முடிக்குமாறு பணியாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
News November 25, 2025
தி.மலை: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

தி.மலை மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கிறதா என உடனே செக் பண்ணுங்க.
1.புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
2.பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
3.வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <
News November 25, 2025
தி.மலை: தீபத் திருவிழா இரண்டாம் நாள் உற்சவம்

தி.மலை அருள்மிகு ஸ்ரீ அருணாசலேஸ்வரர் திருக்கோவில், திருக்கார்த்திகை தீபத்திருவிழா – 2025, இரண்டாம் நாள் காலை இன்று (25/11/2025) ஶ்ரீ விநாயகர் மற்றும் ஶ்ரீ சந்திரசேகரர் சுவாமி சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனையொட்டி, சுவாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


