News April 25, 2025
செல்வம் செழிக்க வைக்கும் பூமாத்தம்மன்

காஞ்சிபுரம் மாவட்டம் வடபாதியில் பூமாத்தம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு அருள்பாளித்து வரும் பூமாத்தம்மனை மனமுருகி பிரார்த்தனை செய்தால் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடையலாம் என நம்பப்படுகிறது. மேலும், பூமாத்தம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு சுமங்கலி பாக்கியம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
பொருளாதார சிக்கலில் தவிக்கும் உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் செய்யவும்
Similar News
News April 26, 2025
காஞ்சிபுரம்: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் 1) மாவட்டம், 2) வட்டம், 3) கிராமம் 4) பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க!
News April 26, 2025
எதிரிகள் தொல்லை நீக்கும் ஜய அனுமன்

காஞ்சிபுரம் மாவட்டம் மகாரண்யம் பகுதியில் கன்யாகுமரி ஜய அனுமன் கோயில் அமைந்துள்ளது. இங்கு அருள்பாலித்து வரும் ஜய அனுமனுக்கு அபிஷேகம் செய்து வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டால் எதிரிகளால் ஏற்படும் தொல்லை நீங்கும் என நம்பப்படுகிறது. மேலும், திருமணம் தடை நீங்கவும் குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இங்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இதனை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து உதவுங்கள்!
News April 26, 2025
அங்கன்வாடி பணியிடங்களுக்கு 3,309 விண்ணப்பம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியிடங்கள், எண்ணிக்கை மற்றும் இனசுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட இருப்பதாக, கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. காஞ்சிபுரத்தில், அங்கன்வாடி பணியிடங்களுக்கு 2,587 பேரும், குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு 136, அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு 586 என மொத்தம் 3,309 பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு செய்யப்படும் நபர்களின் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும்.