News May 7, 2025

செல்வம் கொழிக்க வைக்கும் அட்சய திருதியை வழிபாடு

image

அட்சய திருதி அன்று செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியை பூஜை செய்வது சிறப்பு. இதனால் செல்வம் பெருகும், லட்சுமி கடாட்சம் உண்டாகும். இந்த நல்ல நாளில் மாலை நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி வைத்து விட்டு, அருகில் உள்ள மகாலட்சுமி அல்லது பெருமாள் கோயிகளுக்கு சென்று தாமரை மற்றும் துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இதை உங்கள் அன்பானவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

Similar News

News September 15, 2025

அரியலூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

அரியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (செப்.16) அரியலூர், நகராட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த முகாமில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு தங்களது மனுக்களைக் கொடுத்து அரசின் நலத்திட்டங்களில் பங்கு கொண்டு பயனடையுமாறு அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி அறிவித்துள்ளார்.

News September 15, 2025

அரியலூர்: குடும்பத் தகராற்றில் பெண் தற்கொலை

image

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே ஸ்ரீபுரந்தான் கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்தவர்கள் விஜய முருகன்-ரேவதி தம்பதியர். இந்த தம்பதியர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில், மனவேதனை அடைந்த ரேவதி (37) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது, விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News September 15, 2025

அரியலூர் மாவட்டத்தில் முந்திரி பதப்படுத்தும் பூங்கா!

image

அரியலூர் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டத்தில் அமைந்துள்ள, பரணம் கிராமத்தில் முந்திரி பதப்படுத்தும் பூங்கா அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க…

error: Content is protected !!