News April 14, 2025

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 7944 பேர் கணக்கு தொடங்கினர்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் நலனுக்காக மத்திய அரசு செல்வமகள் சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக ஒரு நிதி ஆண்டுக்கு 250 முதல் அதிகபட்சம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலுத்தி கணக்கு தொடங்கலாம். இந்த திட்டத்தில் குமரி மாவட்டத்தில் கடந்த நிதியாண்டு 7,944 பேர் கணக்குத் தொடங்கியுள்ளதாக தபால் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News November 4, 2025

ஆரல்வாய்மொழி: கனிம வளம் கடத்திய லாரி பறிமுதல்

image

ஆரல்வாய்மொழி  போலீசார் ஆரல்வாய்மொழி 4 வழிச்சாலையில் நேற்று (நவ.3) சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஜல்லிக்கற்களை ஏற்றி வந்த  லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் எந்தவித ஆவணங்களும் இன்றி கனிமவளத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஜல்லியுடன் லாரியை பறிமுதல் செய்த போலீசார் திற்பரப்பஒ சேர்ந்த டிரைவர் சந்திரன்(54) என்பவரை கைது செய்து லாரி உரிமையாளர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

News November 4, 2025

குமரியில் இலவச கண்புரை சிகிச்சை நடைபெறும் இடங்கள்

image

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இலவச கண்புரை சிகிச்சை முகாம் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சிகிச்சையின் மூலம் தெளிவான நீடித்த பார்வை கிடைப்பது மற்றும் நோயாளிகள் விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும். இந்த முகமானது நாளை அகஸ்தீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து நடைபெற உள்ளது. மேலும் முகாம் பல்வேறு இடங்களில் நடைபெறும் தேதிகள் குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

News November 4, 2025

நாகர்கோவில்: தனியார் குடோனில் தீவிபத்து

image

அஞ்சுகிராமம் அருகே ராமனாதிச்சன் புதூரில் தனியார் குடோன் உள்ளது. இங்கு மருந்துக்கழிவுகள், துணி கழிவுகள் மூட்டையாக கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (நவ.3) காலை குடோனில் உள்ள பொருட்கள் தீ பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்த நிலையில் நாகர்கோவில் தீயணைப்பு வீரர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்து குறித்து அஞ்சுகிராமம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!