News April 11, 2025
செல்போன் பேசியதை கண்டித்ததால் சிறுமி தற்கொலை

திருப்பூர் கோல்டன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மெய்ரவன். இவரது மகள் அனுசயா 9ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு, பாதியில் படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இவர் அடிக்கடி போனில் நீண்ட நேரம் பேசி வந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்ததால் மனம் உடைந்த அனுசயா, இன்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News July 9, 2025
TNPSC-யில் 1,910 காலிப்பணியிடங்கள்

TNPSC-யில் காலியாக உள்ள 1,910 CTS Exam (Diploma/ITI) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு BE/B.Tech, Diploma, ITI, M.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க<
News July 9, 2025
கிராம உதவியாளர் பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது?

திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 102 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. ▶️ இதற்கு எழுத்து, ஆவண சரிபார்ப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ▶️ விண்ணப்பம் அந்தந்த மாவட்ட வலைதள பக்கத்தில் விண்ணப்பம் இருக்கும். அதை நகல் எடுத்து, பூர்த்தி செய்து மாவட்ட அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். ▶️ விண்ணப்பிக்க ஆகஸ்ட்.5 கடைசி ஆகும். ▶️ தேர்வு-செப்.5-ம் தேதி நடைபெறும். (SHARE பண்ணுங்க)
News July 9, 2025
விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம்

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 18ம் தேதி காலை 10.30 மணிக்கு, அறை எண் 240 ல் நடைபெறுகிறது. இதில் அனைத்துதுறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளும் கலந்துகொள்ளலாம்.
விவசாயிகளின் கோரிக்கைக்கான மனுக்களை வழங்கிடவும், பின்னர் பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்களில் ஒரு சங்கத்திற்கு ஒருவர் வீதம் பேசலாம் என மாவட்ட கலெக்டர் மனிஷ் கூறியுள்ளார்.