News April 25, 2025

செல்போன் பேசினால் லைசென்ஸ் காலி!

image

கடந்த மூன்று மாதத்தில் சேலம், தருமபுரியில் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 233 பேரின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாகன விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 146 ஓட்டுநர்களின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தயவுசெய்து வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுவதைத் தவிருங்கள் பாதுகாப்பாக இருங்கள்.

Similar News

News December 20, 2025

சேலம்: சொந்த வீடு வேண்டுமா?

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் உடனே விண்ணப்பிக்கலாம். இதற்கு சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். (வீடு கட்ட நினைப்பவர்களுக்கு SHARE பண்ணுங்க)

News December 20, 2025

ஆத்தூர்: மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி

image

ஆத்தூரைச் சேர்ந்தவர் செல்லப்பன் (70). இவர் ஆணைகல்மேட்டில் உள்ள ஏரியில் பழைய பொருட்களை சேகரித்துக்கொண்டு இருந்தார். அப்போது தீ வைத்து எரிந்து கொண்டிருந்த பகுதியில் பிளாஸ்டிக் பொருள்களை எடுக்க முயன்றார். அப்போது மர்ம பொருள் வெடித்து, செல்லப்பன் மீது கண்ணாடி துகள்கள் சிதறியதோடு, தீப்பற்றியது. இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு உயிரிழந்தார்.

News December 20, 2025

சேலம்: +2 போதும்… பள்ளியில் வேலை! APPLY NOW

image

சேலம் மக்களே, மத்திய இடைநிலை கல்வி வாரியம் என்னும் சி.பி.எஸ்.இ. கல்வி துறையில் காலியாக உள்ள 43 இளநிலை கணக்கர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு +2 முதல் படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்படும். இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.22ம் தேதிக்குள் இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!