News March 27, 2025
செல்போன் டவர் அமைப்பதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி

தூத்துக்குடியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் அவரது நிலத்தில் செல்போன் டவர் அமைக்க இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக வந்த குறுந்தகவல் வந்துள்ளது. இதில் அவர் பல்வேறு கட்டணங்கள் கட்ட வேண்டும் எனக் கூறி ரூ.40 லட்சம் வரை கொடுத்து ஏமாந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரித்த போலீசார் முரளி கிருஷ்ணன் என்பவரை இன்று கைது செய்தனர். (SMS மோசடியில் விழிப்புணர்வுடன் செயல்பட பிறருக்கும் ஷேர் செய்யுவும்)
Similar News
News April 12, 2025
சைபர் குற்றங்கள் காவல்துறை விழிப்புணர்வு

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு அறிவிப்பில்; அடையாளம் தெரியாத அழைப்புகள் மூலம் வரும் உடனடி கடன் என்று கூறும் லிங்க் மற்றும் செயலியை பதிவிறக்கம் செய்து பொதுமக்கள் ஏமாந்து விடக்கூடாது எனவும் இத்தகைய சைபர் குற்றங்களில் விழிப்புடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
News April 12, 2025
தூத்துக்குடி மாவட்ட ரோந்து போலீஸ் எண்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (ஏப்.11) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்துப் பணிகளில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 0461-2340393 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 9514144100 எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 11, 2025
திருச்செந்தூர் மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு

திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசவ வலியால் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் குழந்தை இறந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் இன்று அமைச்சர் ம.சுப்பிரமணியம் திடீர் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளிடம் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார்.