News April 3, 2025

செல்போன் டவர் அமைத்து தருவதாக மோசடி

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொது மக்களிடம் கடந்த சில நாட்களாக பிரைம் இந்தியா டவர் என்ற நிறுவனத்தின் பிரதிநிதிகள் என கூறி மர்ம நபர்கள் தனியார் செல்போன் டவர் அமைப்பதற்கு இடம் தேவை என கூறி ஆசை வார்த்தை கூறி பண மோசடியில் ஈடுபட முயன்று வருகின்றனர். இதுபோன்ற சைபர் குற்றங்களில் பாதிக்கப்பட்டால் 1930 அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் எஸ்பி ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 25, 2025

தூத்துக்குடி: வீடுகட்ட ரூ.1.20 லட்சம் நிதி உதவி

image

பிரதம மந்திரி கிராமிய வீடு கட்டும் திட்டத்தின் கீழ், வீடு கட்டுவதற்கு அரசாங்கம் ரூ.1.20 லட்சம் நிதி உதவி வழங்குகிறது. இதில் முழுத் தொகையும் நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படுகிறது. நிரந்தர வீடு இல்லாதவர்கள், வீடற்றவராகவோ அல்லது பாழடைந்த வீட்டில் வசிப்பவர்கள், குறைந்த குடும்ப வருமானம் உள்ளவர்கள் Aawas Survey App ஐப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE IT

News December 25, 2025

தூத்துக்குடி: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்

image

தூத்துக்குடி மக்களே, கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்அப் மூலமாக எளிதாக & விரைவான புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க

News December 25, 2025

தூத்துக்குடி: மாடு வளர்ப்பவர்கள் கவனத்திற்கு!

image

தூத்துக்குடி கால்நடை உதவி மருத்துவர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் 2025-2026-ஆம் ஆண்டு தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் சுமார் 1,10,000 மாட்டினங்களுக்கு இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி போடும்பணி 29.12.2025 முதல் 28.01.2026 வரை கால்நடை பராமரிப்புத்துறையின் மேற்கொள்ளப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!