News June 18, 2024
சென்னை: 6 வயது சிறுவனை கடித்து குதறிய தெரு நாய்கள்

சென்னை மயிலாப்பூரில், 6 வயது சிறுவனை தெரு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நொச்சிக்குப்பம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த சிறுவன், அங்குள்ள நாய்களுக்கு பிஸ்கெட் போட்டுள்ளான். அதை சாப்பிட்ட தெரு நாய்கள், திடீரென சிறுவனை தோள்பட்டை, தலை, கால், கைகளில் கொடூரமாக கடித்தது. சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
Similar News
News March 6, 2026
சென்னை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

சென்னை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <
News March 6, 2026
ஊழலை தார் பூசி மறைக்க முடியாது- அன்புமணி

பா.ம.க. தலைவர் அன்புமணி மத்திய கைலாஷ் எல் வடிவ மேம்பாலம் குறித்து அறிக்கை வெளியிட்டார். அவர், “மேம்பாலம் தரமற்றும் பலவீனமாக கட்டப்பட்டுள்ளது. இப்போது அவசரமாக தார்ச்சாலை அமைத்துள்ளனர். உலகிலேயே புதிதாக அமைக்கப்பட்ட கான்க்ரீட் பாலத்தின் மீது தார்ச்சாலை அமைத்த ஒரே கம்பெனி திமுக கம்பெனி தான். இத்தகைய தார்பூச்சு வேலைகளால் ஊழலை மூடி மறைக்க முடியாது. நீதி தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்” எனக் கூறினார்.
News March 6, 2026
FLASH: சென்னையில் குடிநீர் வராது!

போரூர் ஆற்காடு சாலையில், மெட்ரோ ரயில் பணியின்போது ஏற்பட்ட குடிநீர் குழாய் கசிவு சரி செய்யும் பணி நடைபெற உள்ளது. இதனால், மார்ச்.7, 8ம் தேதிகளில், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்துார், அடையாறு ஆகிய மண்டலங்களில், குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும். நீரை சேமித்து வையுங்கள் மக்களே. அவசர தேவைக்கு, https://cmwssb.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.


