News March 21, 2024

சென்னை: ரொக்கமாக கொண்டு செல்ல தடை

image

தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததை தொடர்ந்து சென்னை கோயம்பேடு கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும் அரசு பேருந்துகளில் ரொக்கப்பணம் கொண்டு செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. பஸ், ரயில் நிலையங்களில் பயணிகள் தீவிரமாக
கண்காணிக்கப்படுகின்றனர் . பயணிகளின் உடமைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News November 5, 2025

சென்னை: ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு…

image

சென்னை மக்களே, நமது நாட்டில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். இந்த <>லிங்கில் <<>>சென்று உங்கள் பெயர், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டால் போதும், உங்கள் ஆதார் எண் மெசேஜில் வந்துவிடும். அந்த எண்ணை வைத்து நீங்கள் உங்கள் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோடு செய்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News November 5, 2025

சென்னையில் கொடூரத்தின் உச்சம்!

image

அம்பத்துார் பகுதியைச் சேர்ந்த, 30 வயது பெண்ணுக்கு, 10 வயதில் மகள் உள்ளார். இவர் மூர்த்தி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் இவரது இரண்டாவது கணவர், தனது 10 வயது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அந்த பெண் புகார் அளித்தார். அம்பத்தூர் மகளிர் போலீசார் மூர்த்தியிடம் விசாரித்ததில், சிறுமியிடம் அத்துமீறியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் நேற்று போக்ஸோவில் கைது செய்யப்பட்டார்.

News November 5, 2025

சென்னை: சிறுவனை கடித்துக் குதறிய தெருநாய்!

image

சென்னை வானகரம் பகுதி வெங்கடேசன் தெருவை சேர்ந்தவர் 9 வயது சிறுவன் லக்ஷன். கடந்த 3ம் தேதி இரவு அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தெருநாய் ஒன்று சிறுவனை துரத்தி சென்று கடித்துள்ளது. இதில் சிறுவனின் கை, கால் & முதுகில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த சிறுவன், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!