News May 16, 2024
சென்னை ரயிலில் புதிய வசதி அறிமுகம்

சென்னைக்கும் திருவண்ணாமலைக்கும் இடையில் ரூ.50 டிக்கெட் கட்டணத்தில் தற்போது கழிவறை அற்ற ரயில் சேவை இயக்கப்படுகிறது. காலை 4 மணிக்கு திருவண்ணாமலையில் புறப்படும் ரயில், 9.50 மணிக்கு சென்னை வந்தடையும்.
மறுமார்க்கமாக மாலை 6 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 12 மணிக்கு சென்றடையும். 6 மணி நேரம் பயண தூரம் கொண்ட வழித்தடத்தில் இயக்கப்படும் இந்த ரயிலில் தற்போது கழிவறை வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
Similar News
News December 27, 2025
சென்னையில் லஞ்சமா? சட்டுனு இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க

அரசு துறைகளில் லஞ்சம் வாங்குவது தொடர்பான புகார்களை 044-22321090 / 22321085, 044-22310989 / 22342142 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். சென்னை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தையும் (044-22311049) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அரசு அதிகாரிகள் யாராக இருந்தாலும் தைரியமாக புகார் கொடுங்கள். லஞ்சம் வாங்குவது குற்றம்! ஷேர் பண்ணுங்க
News December 27, 2025
சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி தடத்தில் நாளை 8 ரயில்கள் ரத்து

சென்னை ரயில் பாதை பராமரிப்புப் பணி காரணமாக நாளை (டிச.28) சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி இடையே 8 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. இதற்கு மாற்றாக எண்ணூர் – சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மேலும், பயணிகளின் கோரிக்கையை ஏற்று ஜனவரி 1 முதல் சென்னை – திருவனந்தபுரம் விரைவு ரயில் மொரப்பூர் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 27, 2025
தற்கொலைக்கு முயன்ற பெண் தூய்மை பணியாளர்

சென்னை உயர்நீதிமன்றம் வளாகம் முழுவதும், தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திடீரென ஒரு பெண் தூய்மை பணியாளர் சாலையில் சென்று கொண்டிருந்த காரின் கீழ் தற்கொலை செய்து கொள்வதாக கூறிவிட்டு, காரின் டைரில் கீழே விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு கீழே விழுந்தால் சிறிது காயம் ஏற்பட்டுள்ளது உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.


