News August 17, 2024

சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

image

சென்னை மாநகராட்சியின் 1913 என்ற புகார் தெரிவிக்கும் சேவையில், புகார்களுக்கு மாநகராட்சியால் தீர்வு காணப்பட்டதை புகார்தாரரிடம் உறுதி செய்த பிறகே அந்த புகாரை முடிக்க வேண்டும் என்று அம்மையத்தின் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் அறிவுறுத்தியுள்ளார். புகாருக்கு தீர்வு காணாமல் முடித்து வைத்தால் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News November 8, 2025

சென்னை: இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்-மிஸ்டு கால் போதும்!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News November 8, 2025

சென்னையில் இருந்து கேரளாவிற்கு ஆம்னி பேருந்து இயங்காது

image

சென்னையில் இருந்து நேற்று முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இருந்து கேரளா சென்ற 30 க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்து கேரள போக்குவரத்து துறை போலீசார் சிறைபிடித்து பொதுமக்களை நடுவழியில் இறக்கிவிட்டனர். 70 லட்சத்துக்கும் மேல் அபராதம் விதித்துள்ளதால் நேற்று இரவு 8 மணி முதல் பேருந்துகள் இயக்கப்படாது என தெரிவித்துள்ளனர்.

News November 8, 2025

FLASH: ரிப்பன் மாளிகையில் போலீஸ் குவிப்பு!

image

சென்னை, தூய்மை பணியாளர்கள் இன்று 100-வது நாள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். காலை 10.30 மணிக்கு பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரிப்பன் மாளிகையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ரிப்பன் மாளிகையில் குவிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் தவிர்க்கவே போலீஸ் பாதுகாப்பு என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

error: Content is protected !!