News August 17, 2024
சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

சென்னை மாநகராட்சியின் 1913 என்ற புகார் தெரிவிக்கும் சேவையில், புகார்களுக்கு மாநகராட்சியால் தீர்வு காணப்பட்டதை புகார்தாரரிடம் உறுதி செய்த பிறகே அந்த புகாரை முடிக்க வேண்டும் என்று அம்மையத்தின் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் அறிவுறுத்தியுள்ளார். புகாருக்கு தீர்வு காணாமல் முடித்து வைத்தால் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News November 22, 2025
சென்னை: சிறுவன் ஓட்டிய பைக்கால் எம்.பி-யின் ஓட்டுநர் பலி!

சென்னை கொட்டிவாக்கம் அருகே பள்ளிச் சிறுவன் நேற்று (நவ.21) பிற்பகலில் தவறான திசையில் பைக் ஓட்டி வந்துள்ளார். இந்த இரு சக்கர வாகனம் மோதியதில், மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்தவர் சுரேஷ் (50) என்பவர் உயிரிழந்தார். இதனையடுத்து பள்ளிச் சிறுவனின் தந்தை முருகனை போலீசார் கைது செய்தனர். உயிரிழந்த சுரேஷ் (50) ராமநாதபுரம் எம்.பி.நவாஸ் கனியின் முகாம் அலுவலகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார்.
News November 22, 2025
சென்னையில் டபுள்டக்கர் பேருந்துகள் மீண்டும் இயக்கம்

சென்னையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு டபுள்டக்கர் பேருந்துகள் மீண்டும் ஓட உள்ளன. தாம்பரம்–பிராட்வே 18ஏ வழித்தடத்தில் ஓடிய இந்த சேவை, மேம்பாலங்கள் அதிகரித்தது மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக 2008ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. தற்போது மாநகர போக்குவரத்து கழகம் 20 புதிய மின்சார டபுள்டக்கர் பேருந்துகளை சேர்த்துள்ளதால், இந்த சேவை இரண்டு மாதங்களில் துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News November 22, 2025
சென்னையில் டபுள்டக்கர் பேருந்துகள் மீண்டும் இயக்கம்

சென்னையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு டபுள்டக்கர் பேருந்துகள் மீண்டும் ஓட உள்ளன. தாம்பரம்–பிராட்வே 18ஏ வழித்தடத்தில் ஓடிய இந்த சேவை, மேம்பாலங்கள் அதிகரித்தது மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக 2008ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. தற்போது மாநகர போக்குவரத்து கழகம் 20 புதிய மின்சார டபுள்டக்கர் பேருந்துகளை சேர்த்துள்ளதால், இந்த சேவை இரண்டு மாதங்களில் துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


