News August 11, 2024
சென்னை மக்களுக்கு காவல்துறையின் குறை தீர்க்கும் முகாம்

சென்னையில் வசிக்கும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களின் புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில் குறை தீர் முகாம் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு வாரமும், புதன்கிழமை காலை 11.00 மணி முதல் 1 மணி வரை வேப்பேரி காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் தங்கள் மனுக்களை ஆணையரிடம் நேரில் அளிக்கலாம்.
Similar News
News November 25, 2025
சென்னை: கணவனை கொன்று தூக்கில் மாட்டிய மனைவி

சென்னை கொடுங்கையூரில், கணவன் மணிகண்டனை நேற்று இரவு நைலான் கயிற்றால் கழுத்தை நெறித்து கொலை செய்த மனைவி சரண்யாவை காவல்துறையினர் கைது செய்தனர். கணவனை கொன்ற பிறகு தூக்கில் தொங்க விட்டுவிட்டு தற்கொலை செய்ததாக நாடகம் ஆடியதும், விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மேலும் எதற்காக கணவனை கொன்றார் கள்ளத்தொடர்பு ஏதும் இவருக்கு இருக்கிறதா? என்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
News November 25, 2025
தீபத் திருவிழாவுக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, அதிக மக்கள் வருகையை கணித்து பொதுமக்கள் வசதிக்காக நாகர்கோவில், கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு போக்குவரத்துக் கழகம் டிசம்பர் 3, 4 தேதிகளில் 160 ஏசி பேருந்துகளை இயக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 25, 2025
சென்னை: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

சென்னை மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கு <


