News August 6, 2024
சென்னை புறநகர் பகுதிகளில் பரவலாக மழை

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையால் இன்று 32 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. குறிப்பாக வேளச்சேரி, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், திருவல்லிகேணி, எழும்பூர், அம்பத்தூர், முகப்பேர், திருவேற்காடு, மதுரவாயல், நெற்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
Similar News
News November 24, 2025
சென்னையில் ரூ.50கோடி ஜிஎஸ்டி முறைகேடு

சென்னையில் ரூ.50 கோடி அளவிற்கு ஜிஎஸ்டி ஏய்ப்பு கண்டறியப்பட்டது என வடசென்னை ஜிஎஸ்டி ஆணையரகம் தெரிவித்துள்ளது. சென்னையில் 12 போலி நிறுவனங்கள் மூலம் ரூ.50 கோடி வரி ஏய்ப்பு ஒருவரை ஜிஎஸ்டி அதிகாரிகள் கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணையில், 90 போலி நிறுவனங்களைத் தொடங்கி நடத்தி வந்தது தெரியவந்துள்ளது. மேலும் 196 சிம் கார்ட் கவர்கள் மற்றும் சிம் கார்டுகள், 42 காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
News November 24, 2025
JUST IN: சென்னையில் சார்பதிவாளர் அதிரடி கைது!

சென்னையில் போலி ஆவணம் மூலம் நிலம் பத்திரப்பதிவு செய்ததாக சென்னை அம்பத்தூர் சார்பதிவாளர் ஜாபர் சாதிக்கை இன்று மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மாதவரத்தில் சார்பதிவாளராக பணியாற்றிய போது போலியாக நிலம் பத்திரப்பதிவு செய்ய உடந்தையாக இருந்ததாக புகார் வந்த நிலையில், சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியில் இருந்தபோதே ஜாபர் சாதிக்கை மத்திய குற்றப்பிரிவு காவல் துறை கைது செய்தது.
News November 24, 2025
JUST IN: சென்னையில் சார்பதிவாளர் அதிரடி கைது!

சென்னையில் போலி ஆவணம் மூலம் நிலம் பத்திரப்பதிவு செய்ததாக சென்னை அம்பத்தூர் சார்பதிவாளர் ஜாபர் சாதிக்கை இன்று மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மாதவரத்தில் சார்பதிவாளராக பணியாற்றிய போது போலியாக நிலம் பத்திரப்பதிவு செய்ய உடந்தையாக இருந்ததாக புகார் வந்த நிலையில், சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியில் இருந்தபோதே ஜாபர் சாதிக்கை மத்திய குற்றப்பிரிவு காவல் துறை கைது செய்தது.


