News August 10, 2024
சென்னை பல்கலையில் சான்றிதழ்கள் வழங்க வேண்டும்

சென்னை பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர் நியமன தேர்வுக்குழு அமைப்பதை காரணம் காட்டி, கடந்த 2023 ஏப்ரலில் பட்டப்படிப்பை முடித்த சுமார் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டப்படிப்புக்கான சான்றிதழ் வழங்கவில்லை. சான்றிதழ் பெறாத காரணத்தால் மாணவர்கள் பல சங்கடங்களை அனுபவித்து வருகிறார்கள். எனவே இப்பிரச்சினையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.
Similar News
News November 26, 2025
சென்னை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News November 26, 2025
சென்னை: குடும்ப பிரச்னையில் உயிரை மாய்துகொண்ட பெண் போலீஸ்!

அண்ணா நகர் போக்குவரத்து காவல்துறையில், கார்த்திகா ராணி (30) என்பவர் காவலராக பணிபுரிந்து வந்தார். திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு குழந்தைகளோடு தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை தகராறு ஏற்ப்பட்ட நிலையில், டி.பி சத்திரம் காவலர் குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
News November 26, 2025
சென்னை: பொதுவெளியில் பெண்களிடம் ஆபாச சைகை

சென்னை வேளச்சேரி பேருந்து நிலையத்தில் நேற்றிரவு பேருந்துக்காக காத்திருந்த பெண்களிடம், பாலியல் ரீதியாக ஆபாச செயலில் ஈடுபட்ட நபரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதையடுத்து போலீசார் நடவடிக்கை எடுத்து, உ.பியை சேர்ந்த மகேஷ் குமார் என்பவரை நேற்று கைது செய்தனர். அவர் சென்னை நகரில் உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்ததாக தெரியவந்துள்ளது.


