News August 10, 2024
சென்னை பல்கலையில் சான்றிதழ்கள் வழங்க வேண்டும்

சென்னை பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர் நியமன தேர்வுக்குழு அமைப்பதை காரணம் காட்டி, கடந்த 2023 ஏப்ரலில் பட்டப்படிப்பை முடித்த சுமார் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டப்படிப்புக்கான சான்றிதழ் வழங்கவில்லை. சான்றிதழ் பெறாத காரணத்தால் மாணவர்கள் பல சங்கடங்களை அனுபவித்து வருகிறார்கள். எனவே இப்பிரச்சினையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.
Similar News
News October 21, 2025
சென்னையில் 4 நாட்களுக்கு மழை புரட்டி எடுக்கும்

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இன்னலையில், இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு சென்னையில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே வெளிய செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையா போங்க. மேலும், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்திற்கும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News October 21, 2025
சென்னையில் இன்று மூடல்

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநகராட்சி பொது சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும், 4 இறைச்சி கூடங்களும், மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு இன்று (செப்-21) அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன. இதேபோல ஜெயின் கோவில்களில் இருந்து, 100 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள அனைத்து இறைட்சி கடைகளும் மூடப்பட்டு இறைச்சி விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி அறிவித்துள்ளது.
News October 20, 2025
சென்னை: இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

சென்னை மாவட்டம் முழுவதும் “Knights on Night Rounds” என்ற திட்டத்தின் கீழ் இன்று (20.10.25) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பெருநகர சென்னை காவல் துறையின் ஒழுங்குமுறை பிரிவினர், தங்கள் எல்லைகளில் போலீஸ் வாகனங்களில் ரவுண்ட் செய்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தனர். அவசரத்துக்காக 100-ஐ தொடர்புகொள்ளலாம்.