News August 7, 2024

சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில் ரத்து

image

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் ஆகஸ்ட் 18 இல் திருநெல்வேலி – சென்னை வந்தே பாரத் ரயில் (20666) முழுமையாக ரத்து செய்யப்படுவதாக மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. மேலும் ஆகஸ்ட் 16, 17 இல் நெல்லை எக்ஸ்பிரஸ் (12631), பொதிகை எக்ஸ்பிரஸ் (12661), கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (12633) சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு பதில் செங்கல்பட்டு நிலையத்திலிருந்து புறப்படும்.

Similar News

News October 22, 2025

JUST IN மதுரை: 5810 காலியிடங்கள் அறிவிப்பு

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. ஆரம்ப நாள்: 21.10.2025
4. கடைசி தேதி : 20.11.2025
5. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>. SHARE பண்ணுங்க

News October 22, 2025

மதுரையில் பட்டாசு வெடித்த 35 பேர் மீது வழக்கு

image

மதுரையில் தீபாவளி அன்று ஒலி எழுப்பும் பட்டாசு வெடிக்க மட்டுமே அனுமதி உள்ளது. ஆனால் பல இடங்களில் விதிமீறியும் பாதுகாப்பற்ற முறையில் பட்டாசு வெடித்ததாக போலீசாருக்கு புகார் வந்தது. இதன் அடிப்படையில் ஐராவதநல்லூர் தெப்பக்குளம் நரிமேடு தல்லாகுளம் மண்மலைமேடு மெயின் ரோட்டு உள்ளிட்ட இடங்களில் பட்டாசு வெடித்ததாக 20 பேரும், மதுரை மாவட்டத்தில் பேரையூர் உள்பட 15க்கு மேற்பட்டோர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

News October 22, 2025

மதுரை: பட்டாசு விபத்து மருத்துவமனையில் 25 பேர் அனுமதி

image

மதுரை தீபாவளி அன்று காலை 7:00 மணி முதல் நேற்று (அக். 21) காலை 7 மணி வரை பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடித்த ஒரு பெண் உள்பட 30 க்கு மேற்பட்டோர், மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்தனர் இவர்களில் 25 பேர் தீவிர சிகிச்சை பிரிவு அறுவை சிகிச்சை தீக்காய பிரிவுகள் சிகிச்சை பெறுகின்றனர். ஒரு சிறுவனுக்கு விரல் நுனி துண்டாகி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, மூன்று பேர் கண் மருத்துவ பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!