News August 15, 2024
சென்னை நகரை பசுமையாக்கும் சென்னை மாநகராட்சி

பசுமையான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில், சென்னை மாநகராட்சி இந்த நிதியாண்டில் ஏப்ரல் 2024 முதல் நடப்பட்ட மொத்த மரங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை என அனைத்து பகுதிகளிலும் இதுவரை, 14948 மரக்கன்றுகள் மொத்தமாக நடப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Similar News
News August 9, 2025
சென்னையை அலறவிட்ட கொலை.. திடுக் திருப்பம்

சூளைமேட்டைச் சேர்ந்தர் முகில். இவர் நேற்று குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவரது அண்ணன் ராஜபிரபா, முகில் கழுத்தை அறுத்து கொலை செய்தார். ஆனால், முகிலை கொன்றது தாய் பிரமிளா என சரணடைந்த நிலையில், ராஜபிரபா அளித்த வாக்குமூலத்தில் தனக்கு அடுத்த மாதம் திருமணம் இருப்பதால் தாய் பழி ஏற்றியதாக கூறினார். பின் ராஜ பிரபாவை கைது செய்தனர்.
News August 9, 2025
சென்னையில் அதிகரித்து வரும் குடிநீர் பிரச்சனை

சென்னை தி.நகர் பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் தற்போது வரை நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி உள்ள மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறுகின்றனர்.
News August 9, 2025
சென்னையில் 15% சாலை விபத்துகள் குறைவு

சென்னையில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் சாலை விபத்துகள் 15 சதவீதம் ஆக தடுக்கப்பட்டுள்ளன என சென்னை போக்குவரத்து காவல் துறை கூடுதல் ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். சென்னை சாலைகளில் 169 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது என்றும், இதனால் குற்றங்கள் குறையும் என்றும் அவர் தெரிவித்தார்.