News August 15, 2024

சென்னை நகரை பசுமையாக்கும் சென்னை மாநகராட்சி

image

பசுமையான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில், சென்னை மாநகராட்சி இந்த நிதியாண்டில் ஏப்ரல் 2024 முதல் நடப்பட்ட மொத்த மரங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை என அனைத்து பகுதிகளிலும் இதுவரை, 14948 மரக்கன்றுகள் மொத்தமாக நடப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Similar News

News October 15, 2025

சென்னை: தந்தைக்கு எமனாகிய மகன்

image

சென்னை குரோம்பேட்டையில் வசித்து வரும் சிவலிங்கத்தை(76), கடந்த 15 ஆண்டுகளாக மன நல சிகிச்சை பெற்று வரும் அவரது மகன் நிரோஷன்(40) நேற்று கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். கொரியர் வந்துள்ளதாக கூறி தாயை வெளியில் அனுப்பிவிட்டு, கத்தியால் தந்தை சிவலிங்கத்தை வயிற்றில் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். சிட்லபாக்கம் போலீஸார் நிரோஷனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News October 15, 2025

சென்னை: EXAM இல்லை.. POST OFFICE-ல் வேலை ரெடி!

image

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும். டிகிரி முடித்த உங்கள் நண்பர்களுக்கு இந்த தகவலை உடனே SHARE பண்ணுங்க.

News October 15, 2025

சென்னை: GST சாலையில் போக்குவரத்து மாற்றம்

image

தீபாவளி பண்டிகை முன்னிட்டு GST சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அக்.17,18 தேதிகளில் ஆவடியில் இருந்து புறப்படும் கனரக வாகனங்கள் பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர் வழியாக தி.மலை போகலாம். மதுரவாயலில் இருந்து சென்னை GST சாலை நோக்கி வரும் வாகனம் ஸ்ரீபெரும்புதூர் காஞ்சிபுரம் வழியாக வரலாம். செங்கல்பட்டு வழியாக வரும் வாகனம் ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் வழியாக சென்னை வரலாம் எனவ தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!