News October 23, 2024
சென்னை – செங்கோட்டை இடையே தீபாவளி சிறப்பு ரயில்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை – செங்கோட்டை இடையே முற்றிலும் குளிரூட்டப்பட்ட சிறப்பு விரைவு ரயிலை தெற்கு ரயில்வே நேற்று அறிவித்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற 30-ஆம் தேதி இரவு 7 மணிக்கு புறப்படும் இந்த விரைவு ரயில், திருவள்ளுவர், காட்பாடி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி வழியாக மறுநாள் காலை செங்கோட்டையை வந்தடைகிறது. இதற்கான முன்பதிவு விரைவில் தொடங்க உள்ளது.
Similar News
News October 31, 2025
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (31-10-25) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விபரம்.அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் -9884042100 ஐ தொடர்பு கொள்ளலாம்.
News October 31, 2025
தென்காசி: 22 நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது

செங்கோட்டை, கடையம், தென்காசி கடையநல்லூர் வட்டாரங்களில் கார் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள இடங்களில் விவசாயிகள் பயன்பெற வேண்டி 22 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் ஒப்புதல் பெறப்பட்டு நுகர் பொருள் வாணிபக் கழகம் மூலம் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருவதாக இன்று நடந்த விவசாயிகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
News October 31, 2025
தென்காசி: வேளாண்மை இடுபொருட்கள் இருப்பு நிலவரம்

தென்காசி மாவட்டத்தில் 2025-2026 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் ஒத்திசைவு சாகுபடி செய்யப்பட்ட நெல் 8836 ஹெக்டர், சிறுதானியங்கள் – 4484 ஹெக்டர். பயறு வகைகள் 530 ஹெக்டேர் பருத்தி 602 கரும்பு 882 ஹெக்டர். எண்ணெய் வித்து 1044 ஹெக்டேர், பழங்கள் 10320 ஹெக்டேர், காய்கறிகள் – 2817 ஹெக்டேர், வாசனைப் பயிர்கள் 655 ஹெக்டேர். மலைப்பயிர்கள் -14337 ஹெக்டேர். பூக்கள் -489 ஹெக்டேர் பரப்பும் ஒத்திசைவு செய்யப்பட்டது.


