News April 3, 2025

சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் மழை

image

சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது திடீரென மழை பெய்து வருகிறது. வேளச்சேரி, ஆதம்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர், மடிப்பாக்கம், கீழ்கட்டளை, பல்லாவரம், கோயம்பேடு, குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது பெய்து வரும் இந்த மழையால் வெப்பம் தணிந்துள்ளது. உங்க ஏரியாவில் மழையா?

Similar News

News April 11, 2025

6ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்

image

சென்னையில், 6ஆம் வகுப்பு மாணவியை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வேன் ஓட்டுனர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் ஆள் இல்லாத நேரம் பார்த்து அத்துமீறி நுழைந்து, சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் தொல்லைகள் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மன அழுத்தத்திற்கு உள்ளான சிறுமி நடந்த சம்பவங்களை தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.

News April 11, 2025

சென்னையில் வரும் 21ஆம் தேதி முதல் அமல்

image

விதிகளை மீறி கட்டுமான மற்றும் கட்டிட கழிவுகளை கொட்டினால் நாள் ஒன்றுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் விதிகளை மீறி கழிவுகளை கொட்டினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். நீர்நிலைகளில் கழிவுகளை கொட்டினால் டன் ஒன்றுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். , கட்டட கழிவுகளை ஒப்படைப்பதில் 1 டன் வரை இலவசமாக கொடுக்கலாம். கழிவுகள் அதிக அளவு இருந்தால் அதற்கேற்ப கட்டணம் வசூலிக்கப்படும்.

News April 11, 2025

முன்ஜாமின் கோரி ஜான் ஜெபராஜ் நீதிமன்றத்தில் மனு

image

பாலியல் வழக்கில் போலீசாரால் தேடப்படும் பிரபல கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ், தனக்கு முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இவர், கடந்தாண்டு தனது வீட்டில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற 2 சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, அந்த சிறுமிகள் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!