News February 15, 2025

சென்னை – கும்மிடிப்பூண்டி இடையே 25 ரயில்கள் ரத்து

image

பொன்னேரி – கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (பிப்.16) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இதன் காரணமாக, சென்னை – கும்மிடிப்பூண்டி இடையே இயக்கப்படும் 25 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எனினும், பயணிகள் வசதிக்காக சென்ட்ரல் – பொன்னேரி இடையே 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

Similar News

News December 27, 2025

சென்னையில் லஞ்சமா? சட்டுனு இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க

image

அரசு துறைகளில் லஞ்சம் வாங்குவது தொடர்பான புகார்களை 044-22321090 / 22321085, 044-22310989 / 22342142 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். சென்னை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தையும் (044-22311049) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அரசு அதிகாரிகள் யாராக இருந்தாலும் தைரியமாக புகார் கொடுங்கள். லஞ்சம் வாங்குவது குற்றம்! ஷேர் பண்ணுங்க

News December 27, 2025

சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி தடத்தில் நாளை 8 ரயில்கள் ரத்து

image

சென்னை ரயில் பாதை பராமரிப்புப் பணி காரணமாக நாளை (டிச.28) சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி இடையே 8 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. இதற்கு மாற்றாக எண்ணூர் – சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மேலும், பயணிகளின் கோரிக்கையை ஏற்று ஜனவரி 1 முதல் சென்னை – திருவனந்தபுரம் விரைவு ரயில் மொரப்பூர் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 27, 2025

தற்கொலைக்கு முயன்ற பெண் தூய்மை பணியாளர்

image

சென்னை உயர்நீதிமன்றம் வளாகம் முழுவதும், தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திடீரென ஒரு பெண் தூய்மை பணியாளர் சாலையில் சென்று கொண்டிருந்த காரின் கீழ் தற்கொலை செய்து கொள்வதாக கூறிவிட்டு, காரின் டைரில் கீழே விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு கீழே விழுந்தால் சிறிது காயம் ஏற்பட்டுள்ளது உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

error: Content is protected !!