News August 14, 2024

சென்னை கழிவுநீர் அகற்று வாரியம் புகார் எண் அறிவிப்பு

image

மனிதர்களைக் கொண்டு கழிவுநீர் அகற்றும் பணிகளை மேற்கொண்டால் பொதுமக்கள் உடனடியாக கட்டணமில்லா தேசிய உதவி எண் 14420-ஐ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் தெரிவித்துள்ளது. கழிவுநீர் தொட்டிகளில் ஏற்படும் விஷவாயுக்கள் மனித உயிர்களை பாதிக்காமல் இருக்க இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 7, 2025

SIR: திமுக கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

image

எஸ்.ஐ.ஆரை கண்டித்து நவம்பர் 11-11-2025 அன்று காலை 10.30 மணிக்கு சென்னை மண்டலம் உட்பட அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளன. எஸ்.ஐ.ஆருக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்த போதிலும் பணியை தொடங்கிய தேர்தல் ஆணையத்தை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நவ.11ல் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

News November 6, 2025

சென்னை: இனி லைன்மேனை தேடி அலையாதீங்க!

image

சென்னை மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 6, 2025

25 லட்சம் பிஸ்கட் பாக்கெட் வழங்கும் தமிழக அரசு

image

சபரிமலை பக்தர்களுக்காக 25 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை தமிழ்நாடு அரசு அனுப்பி வைக்க உள்ளது. தேவஸ்தானம் கேட்டு கொண்டதால் வரும் 14ஆம் தேதி தமிழ்நாடு அரசு பிஸ்கட் பாக்கெட்டுகளை அனுப்பி வைக்கும். தமிழக பக்தர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கேரள அரசின் துணையோடு தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் எனவும் அதற்கான ஏற்பாடுகாளை இந்து சமய அறைநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்து வருகிறார்.

error: Content is protected !!