News April 26, 2025
சென்னை கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு

பூந்தமல்லி பகுதியில் உள்ள தனியார் பிசியோதெரபி கல்லூரியில் படிக்கும் மாணவ – மாணவிகள் 28 பேர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தனர். அப்போது ஆழியாறு ஆற்றில் குளித்து கொண்டிருந்தபோது, 4ஆம் ஆண்டு படிக்கும் ஜோசப் ஆண்டன் ஜெனிப் (21), ரேவந்த் (21), 3ஆம் ஆண்டு படிக்கும் தருண் விஸ்வரங்கன் (19) ஆகியோர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
Similar News
News December 14, 2025
BIG NEWS: சென்னையை குறிவைக்கும் பாஜக?

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக 50 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் மயிலாப்பூர், தி.நகர், வேளச்சேரி, விருகம்பாக்கம், சோளிங்கர், எழும்பூர், துறைமுகம், ஆயிரம் விளக்கு, குறிப்பாக முதல்வர் தொகுதியான கொளத்தூர் ஆகிய தொகுதிகளில் பாஜகவிற்கு வெற்றிவாய்ப்பு உள்ளது என அடையாளம் கண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உங்க கருத்து என்ன?
News December 14, 2025
சென்னையில் குடிநீர் பற்றாக்குறை இருக்காது!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட மூன்று முக்கிய நீர்த்தேக்கங்கள், 27 ஆண்டுகளுக்குப் பிறகு 100 சதவீதம் முழுமையாக நிரம்பியுள்ளன. இதன் காரணமாக, அடுத்த கோடை காலத்தில் சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது என நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கடைசியாக 1998-ஆம் இந்த மூன்று ஏரிகளும் முழுமையாக நிரம்பியது குறிப்பிடத்தக்கது.
News December 14, 2025
சென்னையில் குடிநீர் பற்றாக்குறை இருக்காது!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட மூன்று முக்கிய நீர்த்தேக்கங்கள், 27 ஆண்டுகளுக்குப் பிறகு 100 சதவீதம் முழுமையாக நிரம்பியுள்ளன. இதன் காரணமாக, அடுத்த கோடை காலத்தில் சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது என நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கடைசியாக 1998-ஆம் இந்த மூன்று ஏரிகளும் முழுமையாக நிரம்பியது குறிப்பிடத்தக்கது.


