News April 26, 2025
சென்னை கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு

பூந்தமல்லி பகுதியில் உள்ள தனியார் பிசியோதெரபி கல்லூரியில் படிக்கும் மாணவ – மாணவிகள் 28 பேர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தனர். அப்போது ஆழியாறு ஆற்றில் குளித்து கொண்டிருந்தபோது, 4ஆம் ஆண்டு படிக்கும் ஜோசப் ஆண்டன் ஜெனிப் (21), ரேவந்த் (21), 3ஆம் ஆண்டு படிக்கும் தருண் விஸ்வரங்கன் (19) ஆகியோர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
Similar News
News December 20, 2025
சென்னையில் ஜனவரி 8 புத்தகக் கண்காட்சி தொடக்கம்

49வது சென்னை புத்தகக் காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறுகிறது. பபாசி தலைவர் சண்முகம் செய்தியாளர் சந்திப்பில், தொடக்க விழாவை முதலமைச்சர் ஸ்டாலின் துவக்குவார் என்றும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்பர் என்றும் தெரிவித்தார். மேலும் புத்தகத் திருவிழாவில் 6 பேருக்கு கலைஞர் பொற்கிழி விருது வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
News December 20, 2025
சென்னை உணவுத் திருவிழா நாளை தொடக்கம்

மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களை அனைவரும் அறிந்திட வேண்டும் என்ற நோக்கத்துடன், 21.12.25 முதல் 24.12.25 வரை சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் உணவுத் திருவிழா நடைபெறுகிறது. முன்னணி உணவகங்களின் தரத்திற்கு இணையாக சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இவ்விழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நாளை மாலை 4.00 மணிக்கு துவக்கி வைக்க உள்ளார்.
News December 20, 2025
சென்னை: 12th பாஸ் போதும்; ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

1.இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 394 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2.கல்வி தகுதி: 12th, B.Sc, டிப்ளமோமுடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.25,000 முதல் 1,05,000 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் இங்கே <
5.விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.09. செம்ம வாய்ப்பு! உடனே ஷேர் பண்ணுங்க.


